பிரிவு
ஒரு விபத்தைப் போலவும்
காற்றாடியின் நூல்
பட்டென்று
அறுவதைப் போலவும்
நிகழ்ந்து விடுகிறது.
முந்தைய
நிகழ்வின்
நினைவுகள்
நிழலாய் தொடர்ந்து
வாட்டுகிறது.
பிரிவு ஏற்படாதவாறு
சாத்தியக் கூறுகள்
இருப்பினும்
நிகழ்ந்தே விடுகிறது
பிரிவு
மீண்டும் பழையபடி
தொடங்க இருப்பினும்
கைகளும்
கால்களும்
கட்டப்பட்டு
பிரிவிலேயே
வாழும் படியாகிறது.
பிடித்தோ
பிடிக்காமலோ
நிகழ்வது பிரிவு
வாழ்வின் அடுத்த
கணத்தை
கணிக்க முடியாத
அறிவை
நொந்து கொண்டு
வாழும்
நடைபிணமாய்
மாற்றுகிறது
பிரிவு
மரணத்தை விட
கொடியது என்பதைத்
தவிர-பிரிவைப்பற்றி
வேறென்ன
சொல்ல.