Wednesday, July 21, 2010

மனைவி





மனைவி ஊருக்குப் போயிருக்கிறாள்
இனி எனக்கென்ன கவலை
தற்காலிக விடுதலை
இனி இல்லை இல்லாள் தொல்லை
ஏன்? எப்படி? எதற்கு? போன்ற
தொலைத்தெடுக்கும்
தொல்லை கேள்விகள் இல்லை
நித்தம் ஓர் உணவு விடுதி
வகை வகையான உணவு
இஷ்டம் போல் எழலாம்
எட்டு மணிக்கு
கோயில் சாமி
கொடுமையும் இல்லை
கட்டுகள் அவிழ்க்கப்பட்ட
காளையாய்த் திரியலாம்
நினைத்த போது சினிமா
சத்தமாய் பாட்டு
வீடே அதிரும் படி
எம்பிக் குதிக்கலாம்
ஆனாலும்
அளவு தெரியாமல்
குறைத்துச் சாப்பிட்டதால்
அதிகாலைப் பசியில்
உருளும் போது
உள் மனசுக்கு மட்டும் தெரியும்
அவள்  இல்லா
வெறுமையும் வலியும்.

4 comments:

  1. Hi Mullai ........

    How are you ?

    Kavithai Superb

    Plz. update more kavithai

    Best Regards
    A. Arulraja

    ReplyDelete
  2. உங்கள் கவிதை என்னை மிகவும் நெகிழவைத்தது.
    நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்.
    என்பதுகேற்ப
    உங்களது கவிதை உள்ளது.
    உங்கள் கவிதை பயணம் தொடர எனது மனமார்ந்த
    வாழ்த்துகள்.
    உங்களது கவிதை வாசகன்
    பிரகாஷ்.ப

    ReplyDelete
  3. Congratulations!
    dear mullai sir,

    Your kavithai is very nice.
    "Manaivi" kavithai is very interesting.
    it is time dependent.

    All the best.

    regards,
    senthilkumar
    trichy-14

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...