நண்பர்கள் சந்திப்பு
பத்தாண்டுகள்
கழித்து
கண்டெடுத்தோம்
கல்லூரி காலத்திற்கு பிறகு
கலைந்து போன நண்பர்களை
நகரின் மையப் பகுதியில்
குளிர் சாதன அறையொன்றில்
சோமபானம் சுராபாணம் தவிர்த்த
சுகமான சந்திப்பு
பழைய முகம் தேடினோம்
அறிமுகபடுத்தும் அளவுக்கு
மாறிப்போன சில முகங்கள்
மார்க்கண்டேயனாய்
மாறாத சில முகங்கள்
கட்டிபிடித்தலும்
கண்ணீரில் கரைவதுமாய்
நகர்ந்தன
சில கணங்கள்
அளவற்ற பேச்சினால்
அன்பை பகிர்ந்தோம்
திரும்பி வருகையில்
காதில் ஒலித்துகொண்டே இருந்தது
பிள்ளை இல்லாத ஒரு
நண்பனின் புலம்பல்
வறுமையை ஒளித்து பேசிய ஒரு
நண்பனின் பேச்சு
நான்
காருக்கு
கட்ட வேண்டி
காத்திருக்கும்
தவணை
நினைவில் நிழலாடியது.
பத்தாண்டுகள்
கழித்து
கண்டெடுத்தோம்
கல்லூரி காலத்திற்கு பிறகு
கலைந்து போன நண்பர்களை
நகரின் மையப் பகுதியில்
குளிர் சாதன அறையொன்றில்
சோமபானம் சுராபாணம் தவிர்த்த
சுகமான சந்திப்பு
பழைய முகம் தேடினோம்
அறிமுகபடுத்தும் அளவுக்கு
மாறிப்போன சில முகங்கள்
மார்க்கண்டேயனாய்
மாறாத சில முகங்கள்
கட்டிபிடித்தலும்
கண்ணீரில் கரைவதுமாய்
நகர்ந்தன
சில கணங்கள்
அளவற்ற பேச்சினால்
அன்பை பகிர்ந்தோம்
திரும்பி வருகையில்
காதில் ஒலித்துகொண்டே இருந்தது
பிள்ளை இல்லாத ஒரு
நண்பனின் புலம்பல்
வறுமையை ஒளித்து பேசிய ஒரு
நண்பனின் பேச்சு
நான்
காருக்கு
கட்ட வேண்டி
காத்திருக்கும்
தவணை
நினைவில் நிழலாடியது.
No comments:
Post a Comment