Tuesday, August 31, 2010

கனவுகள்










பகலில் காண்பதெல்லாம்
உடைதரித்த வேடம்

இரவில் வருவதெல்லாம்
நிர்வாண நிஜம்

கனவுகள் தின்ன தின்ன
நான் இளைக்கிறேன்

வாழ்வில் நிகழ்ந்து விட்ட
சோகமெல்லாம்
துண்டு துண்டாய்
ஊர்வலம் போகின்றன
என் தூக்கத்தில்

என்னைத் துளைத்தெடுத்த
பெண்ணெல்லாம்
ஊர்வலமாய்ப் போகின்றனர்
என் கனவில்
உதறி எழுகிறேன்

என்றோ நிகழ்ந்ததெல்லாம்
ஜீரணமின்றி
தலைசுற்ற
வெளித்தள்ளுகிறது
கனவு

லட்சியக் கனவு
என்பதெல்லாம் பொய்
கனவுகள் மட்டும் தான்
மெய்

இதயத்தின் மனசாட்சி
கனவாய்ப் போய்க்
குடியேறுகிறது

என் கனவுகள்
எப்பொழுதும்
என்னைத் துரத்தும்

நான் கண்மூடி
மரணித்து விட்டால்

என் துன்பத்திற்கு
யார் காரணமோ
அங்குப் போய் குடியேறும்

அவன்
தூக்கத்தைத்
தொலைத்தாவது
உயிர்வாழும்


1 comment:

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...