பகலில் காண்பதெல்லாம் உடைதரித்த வேடம் இரவில் வருவதெல்லாம் நிர்வாண நிஜம் கனவுகள் தின்ன தின்ன நான் இளைக்கிறேன் வாழ்வில் நிகழ்ந்து விட்ட சோகமெல்லாம் துண்டு துண்டாய் ஊர்வலம் போகின்றன என் தூக்கத்தில் என்னைத் துளைத்தெடுத்த பெண்ணெல்லாம் ஊர்வலமாய்ப் போகின்றனர் என் கனவில் உதறி எழுகிறேன் என்றோ நிகழ்ந்ததெல்லாம் ஜீரணமின்றி தலைசுற்ற வெளித்தள்ளுகிறது கனவு லட்சியக் கனவு என்பதெல்லாம் பொய் கனவுகள் மட்டும் தான் மெய் இதயத்தின் மனசாட்சி கனவாய்ப் போய்க் குடியேறுகிறது என் கனவுகள் எப்பொழுதும் என்னைத் துரத்தும் நான் கண்மூடி மரணித்து விட்டால் என் துன்பத்திற்கு யார் காரணமோ அங்குப் போய் குடியேறும் அவன் தூக்கத்தைத் தொலைத்தாவது உயிர்வாழும் |
Tuesday, August 31, 2010
கனவுகள்
Subscribe to:
Post Comments (Atom)
மனம்
மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...
-
நண்பர்கள் சந்திப்பு பத்தாண்டுகள் கழித்து கண்டெடுத்தோம் கல்லூரி காலத்திற்கு பிறகு கலைந்து போன நண்பர்களை நகரின் மையப் பகுதியில் ...
-
விலங்கு நடந்தால் காடு செழிக்கும் மனிதன் நடந்தால் புற்கள் கூட மிஞ்சுவதுண்டா வருமானத்து அதிகமான சொத்து சேர்த்த வழக்கு எந்த விலங்கின் மீதாவது ...
-
கவிதை குழந்தையின் கிறுக்கலில் ஒளிந்துகொண்டிருகிறது அழகான ஓவியம் அம்மாவின் அழகான கோலத்தில் மறைந்திருக்கிறது எரும்புத்தீ...
This comment has been removed by the author.
ReplyDelete