தெறித்த வார்த்தையில் ஜனித்த வரலாறு ஏராளம். கூனியின் ஏளனம் இராமாயணம் பாஞ்சாலியின் ஏளனம் மகாபாரதம். இந்த‘வார்த்தை’ நாயகனாய் வலம் வந்ததை விட வில்லனாய் திரிந்தது தான் ஏராளம். சூடான வார்த்தைக்கு முன்னால் உடன்படிக்கைகள் ஊனமுற்ற குழந்தைகள் தொண்டைக்குள் சிக்குவதெல்லாம் அன்பின் வார்த்தைகள் கொட்டித் தீர்ப்பதெல்லாம் பிரிவின் அடையாளங்கள் காற்றில் கரைந்து போகும் இந்த வார்த்தைகள் தான் சில நேரங்களில் நெஞ்சு நின்று போகச் செய்து விடுகிறது. வார்த்தைகளின்றி உன் நெஞ்சும் என் நெஞ்சும் பேசிக் கொண்டால் உறவுகள் என்றுமே சுகம் தான். |
Thursday, August 5, 2010
வார்த்தை
Subscribe to:
Post Comments (Atom)
மனம்
மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...
-
நண்பர்கள் சந்திப்பு பத்தாண்டுகள் கழித்து கண்டெடுத்தோம் கல்லூரி காலத்திற்கு பிறகு கலைந்து போன நண்பர்களை நகரின் மையப் பகுதியில் ...
-
விலங்கு நடந்தால் காடு செழிக்கும் மனிதன் நடந்தால் புற்கள் கூட மிஞ்சுவதுண்டா வருமானத்து அதிகமான சொத்து சேர்த்த வழக்கு எந்த விலங்கின் மீதாவது ...
-
கவிதை குழந்தையின் கிறுக்கலில் ஒளிந்துகொண்டிருகிறது அழகான ஓவியம் அம்மாவின் அழகான கோலத்தில் மறைந்திருக்கிறது எரும்புத்தீ...
No comments:
Post a Comment