Thursday, August 5, 2010

வார்த்தை



                         










தெறித்த வார்த்தையில்
ஜனித்த வரலாறு ஏராளம்.

கூனியின் ஏளனம் இராமாயணம்
பாஞ்சாலியின் ஏளனம் மகாபாரதம்.

இந்த‘வார்த்தை’
நாயகனாய்
வலம் வந்ததை விட
வில்லனாய் திரிந்தது தான்
ஏராளம்.

சூடான வார்த்தைக்கு முன்னால்
உடன்படிக்கைகள்
ஊனமுற்ற குழந்தைகள்

தொண்டைக்குள் சிக்குவதெல்லாம்
அன்பின் வார்த்தைகள்
கொட்டித் தீர்ப்பதெல்லாம்
பிரிவின் அடையாளங்கள்

காற்றில் கரைந்து போகும்
இந்த வார்த்தைகள் தான்
சில நேரங்களில்
நெஞ்சு நின்று போகச்
செய்து விடுகிறது.
வார்த்தைகளின்றி
உன் நெஞ்சும்
என் நெஞ்சும்
பேசிக் கொண்டால்
உறவுகள் என்றுமே
சுகம் தான்.

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...