Tuesday, September 7, 2010

மனிதர்கள்





கட்டித் தழுவும் போதும்
கை குலுக்கும் போதும்
நெகிழ்ந்து போகும்
என் மனசு

அப்போதெல்லாம்
ஆள் அரவமில்லாத
பச்சைப் புல்வெளியில்
இஷ்டம் போல்
புரள்வதாய்
நினைத்துக்கொள்ளும்
என் மனசு

சிரித்து நலம் விசாரிக்கும்
மளிகைக் கடைக்காரர்
சின்னதாய் புன்னகைக்கும்
எதிர்வீட்டுக்காரர்

இன்னும் பூமியில்
எல்லாரும் எல்லாமும்
பிடிக்கும்

நிழல் அடர்ந்தமரம்
மாலை நேரத்து வெயில்
அதிகாலை குளிர்
பேருந்தின் முன்வரிசை
இன்னும் என்னென்னவோ
பிடிக்கும்

கட்டித் தழுவியவனும்
கைகுலுக்கியனும்
நான் தடுக்கிவிழும்போது
சிரிக்கும் போது
அத்தனையும் பொசுங்கிப்போகும்
என் மனசும்தான்.

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...