கட்டித் தழுவும் போதும்
கை குலுக்கும் போதும்
நெகிழ்ந்து போகும்
என் மனசு
அப்போதெல்லாம்
ஆள் அரவமில்லாத
பச்சைப் புல்வெளியில்
இஷ்டம் போல்
புரள்வதாய்
நினைத்துக்கொள்ளும்
என் மனசு
சிரித்து நலம் விசாரிக்கும்
மளிகைக் கடைக்காரர்
சின்னதாய் புன்னகைக்கும்
எதிர்வீட்டுக்காரர்
இன்னும் பூமியில்
எல்லாரும் எல்லாமும்
பிடிக்கும்
நிழல் அடர்ந்தமரம்
மாலை நேரத்து வெயில்
அதிகாலை குளிர்
பேருந்தின் முன்வரிசை
இன்னும் என்னென்னவோ
பிடிக்கும்
கட்டித் தழுவியவனும்
கைகுலுக்கியனும்
நான் தடுக்கிவிழும்போது
சிரிக்கும் போது
அத்தனையும் பொசுங்கிப்போகும்
என் மனசும்தான்.
No comments:
Post a Comment