Tuesday, September 7, 2010

பழைய புகைப்படம்










பள்ளிப்பருவத்தின்
வாட்சு தெரிய
முதல் வரிசையில்
நான் நின்ற
புகைப்படம்
பலமுறை
ரசித்தபடம்
தோழியர் முகம்
பார்க்க

பத்தாம் வகுப்பில்
எடுக்கப்பட்ட
நுழைவுத் தேர்வு
புகைப்படம்-நான்
அவனில்லை

பிரியப் போகிறோம்
என்று கூறி
மூன்று நண்பர்களும்
ஒன்றாய் எடுத்தப்படம்
ஒன்றாய்
ஊர்
சுற்றுகிறோம்
வேலையின்றி

கல்லூரிக் காலத்தில்
நானும் காதலியும்
எடுத்தபடம்
என் மீது நம்பிக்கையின்றி
வாங்கிச் சென்றபடம்

கடன் தொல்லையுடன்
கவலை ரேகை
என் முகத்தில் தெரிய
எடுத்த கல்யாண
புகைப்படம்.

எல்லாவற்றையும் விட
தாத்தாவும் பாட்டியும்
சேர்ந்து அமர்ந்த மாதிரி
சேர்த்து அமைக்கப்பட்ட
படம் தெய்வமாய்
காக்கிறது என் மழலைக்
காலம் முதல்



6 comments:

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...