Saturday, October 2, 2010

நீர்க்குமிழி









பேசிய வார்த்தைகளும்
பேசாத வார்த்தைகளும்
பேசிக் கொண்டன – இது
காதலின் ஒரு வகை
பற்றிக் கொள்ளுமோ என
பார்வையைத் தவிர்த்தல்
காதலின் புதுவகை
வார்த்தைகள் பரிமாறிக்
கொண்டோம்
சொல்லாமல் விடப்பட்டது
காதல்
நீ பார்வையால் பரிமாறினாய்
நான்
பசியாறினேன்.
காதல் ஒரு
நீர்குமிழி
கையில் ஏந்த முடியாமலும்
காற்றில் உடைந்து விடுமோ
என்ற அச்சத்திலும்
காத்திருக்கிறேன்.


No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...