Saturday, November 20, 2010

குதிரை




தலைக்கு கீரீடம்
எனினும்
உந்தன் கால்களுக்கே
அவை

உந்தன் நடையில்
ராஜ கம்பீரம்
ஆயினும் உந்தன்
பார்வை கனிவுதான்

ஓடிக் களைத்ததாய்
ஒரு சொட்டு கண்ணீர்
உன்னிடமில்லை

முன்வைத்த காலை
பின் வைத்த
ஓர் இழி பிறப்பல்ல நீ

உந்தன்
பிடறி சிலிர்ப்பில்
பெருமிதம் கண்டோம்
நாங்களும்
சிலிர்த்துப் பார்த்தோம்
தோற்றுப் போனோம்

நீ
படுத்து உறங்கி
நான்
பார்த்ததுமில்லை
தூக்கத்திற்கு கூட
இலக்கணம் வகுத்த
உந்தன் உழைப்பு
எனக்கு வியப்பு

நீ
சேணம் பூட்டியதற்காக
வருந்தியதில்லை
உந்தன் பார்வை
கூர்மைதான்

பந்தயம் கட்டியதற்காக
நீ ஓடவில்லை
இதை உணராமானிடரிடம்
கனைத்து சிரித்து பின்
கால் போன போக்கில்
நடப்பாய் இலக்கின்றி

ஆனாலும்
நீ கொடுத்தாய்
உன்னை எட்டுதல்
எனக்கோர் இலக்காய்

1 comment:

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...