Saturday, November 20, 2010

பிரிவு






பிரிவு
ஒரு விபத்தைப் போலவும்
காற்றாடியின் நூல்
பட்டென்று
அறுவதைப் போலவும்
நிகழ்ந்து விடுகிறது.

முந்தைய
நிகழ்வின்
நினைவுகள்
நிழலாய் தொடர்ந்து
வாட்டுகிறது.

பிரிவு ஏற்படாதவாறு
சாத்தியக் கூறுகள்
இருப்பினும்
நிகழ்ந்தே விடுகிறது
பிரிவு

மீண்டும் பழையபடி
தொடங்க இருப்பினும்
கைகளும்
கால்களும்
கட்டப்பட்டு
பிரிவிலேயே
வாழும் படியாகிறது.

பிடித்தோ
பிடிக்காமலோ
நிகழ்வது பிரிவு

வாழ்வின் அடுத்த
கணத்தை
கணிக்க முடியாத
அறிவை
நொந்து கொண்டு
வாழும்
நடைபிணமாய்
மாற்றுகிறது
பிரிவு

மரணத்தை விட
கொடியது என்பதைத்
தவிர-பிரிவைப்பற்றி
வேறென்ன
சொல்ல.

2 comments:

  1. Your kavithai ennai en kalloori kaalathirku kondu sendrathu. En ninaivukalalai kilari vittu vittathu.

    regards

    senthil kumar

    ReplyDelete
  2. Ungal Kavithaikal enai mekavum kavarnthna. Nan rasethen Unakal Kavithayei madum. Ungal enankalai elai.

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...