இரகசியங்கள்
ஒவ்வொரு மனதிலும்
சொல்லக் கூடாத
சொல்லப் படாத
இரகசியங்கள் எனப்பல உண்டு
ஒரு கருமியின்
பணப் பெட்டியைப் போல்
அடிக்கடி திறந்து பார்த்துக்
கொள்வதும் உண்டு
இரகசியங்களில்
நினைத்து நினைத்து
இரசிப்பதும்
நினைவில் வந்து வாட்டுவதும்
இன்னதென்று புரியாத
சோகத்தில் ஆழ்த்துவதுமாய்
நிறைய உண்டு
நண்பனிடம்
சொல்லும் இரகசியம்
மனைவியிடம் சொல்வதற்கில்லை
மனைவியிடம் சொல்லும் இரகசியம்
நண்பனிடம் சொல்வதற்கில்லை
நம்முள் இருக்கும்
இரகசியங்கள்
மண்ணுக்குள் உள்ள
விதைகளாய் –அவைகள் எல்லாம்
விருட்சங்களாய் வானில்
கிளை பரப்பி
காற்றோடு பேசுமோ
அல்லது
மெளனமாய் போகுமோ
No comments:
Post a Comment