Friday, January 21, 2011


இரகசியங்கள்







ஒவ்வொரு மனதிலும்
சொல்லக் கூடாத
சொல்லப் படாத
இரகசியங்கள் எனப்பல உண்டு

ஒரு கருமியின்
பணப் பெட்டியைப் போல்
அடிக்கடி திறந்து பார்த்துக்
கொள்வதும் உண்டு

இரகசியங்களில்
நினைத்து நினைத்து
இரசிப்பதும்
நினைவில் வந்து வாட்டுவதும்
இன்னதென்று புரியாத
சோகத்தில் ஆழ்த்துவதுமாய்
நிறைய உண்டு


நண்பனிடம்

சொல்லும் இரகசியம்
மனைவியிடம் சொல்வதற்கில்லை
மனைவியிடம் சொல்லும் இரகசியம்
நண்பனிடம் சொல்வதற்கில்லை

நம்முள் இருக்கும்
இரகசியங்கள்
மண்ணுக்குள் உள்ள
விதைகளாய் –அவைகள் எல்லாம்
விருட்சங்களாய் வானில்
கிளை பரப்பி
காற்றோடு பேசுமோ
அல்லது
மெளனமாய் போகுமோ

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...