திருமணம் செய்தால்
உன்னைப் போல்
ஒருவனைத் தானடா
வகுப்பறையில்
அகநானூறு
நட்த்தும் போது
அகல விழிகளால்
அகழ்ந்தெடுத்தவள் நீ
உன் வீட்டு
விழாக்களுக்கு அழைத்து
உன் தோழிகளிடம்
என்னைக் காட்டி
ஏதேதோ சொன்னாய்
ஆட்டோ கிராஃபின்
கடைசி பக்கத்தில்
காதலை சொல்லியும்
சொல்லாமலும்
கலங்கடித்தவள்
இது
காதலில்லை
இல்லை என நீ
சொன்ன போது
உன்
கலங்கிய
கண்கள் சொன்னது
இது காதலென்று
No comments:
Post a Comment