Saturday, March 26, 2011

பார்வை







திருமணம் செய்தால்
உன்னைப் போல்
ஒருவனைத் தானடா

வகுப்பறையில்
அகநானூறு
நட்த்தும் போது
அகல விழிகளால்
அகழ்ந்தெடுத்தவள் நீ

உன் வீட்டு
விழாக்களுக்கு அழைத்து
உன் தோழிகளிடம்
என்னைக் காட்டி
ஏதேதோ சொன்னாய்

ஆட்டோ கிராஃபின்
கடைசி பக்கத்தில்
காதலை சொல்லியும்
சொல்லாமலும்
கலங்கடித்தவள்

இது
காதலில்லை
இல்லை என நீ
சொன்ன போது
உன்
கலங்கிய
கண்கள் சொன்னது
இது காதலென்று

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...