Tuesday, April 5, 2011

மகனே ஒரு நிமிடம்




அன்று
உன்
விரல் பிடித்து
நடக்க பழக்கினேனே
நானோ
இன்று
என்
தள்ளாமைக்கு
தோள் கொடுப்பாய்
என இருந்தேன்

வேறு வழியில்லை
வாக்கிங் ஸ்டிக்
வாங்கிக் கொண்டேன்

என் தோள்மேல் தூக்கி
உன்னை கடவுளை தரிசிக்க
சொன்னேன்
அதனால் தானோ என்னவோ
எனக்கு
அவன்
அருள் கிடைக்கவில்லை

உன்னோடு
பேசிக்கொண்டே இருந்தேன்
நீ பேச்சுப் பழக
இன்று தொணதொணப்பாகிக் போனேனே
உயிர் போகாமல்
இருக்கேனே

ஊரெல்லாம்
கடன்பட்டேன்
உன் உயர்வுக்காக
பெற்ற கடன்
தீர்ப்பாயா?

நீ
சபையில்
உன்
தோளில்
மாலை
என்
தோளில்
நுகத்தடி

மகிழ்ச்சிதான்
மகனே
உன் மனைவி
உன் மகன் ஊர்வலமாய்
நீங்கள்.

எனக்காக
ஒன்றே ஒன்று மட்டும்
செய்
என் பேரனை
நல்ல மகனாய்
வளர்த்து விடு
போதும் எனக்கு.

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...