அன்று
உன்
விரல் பிடித்து
நடக்க பழக்கினேனே
நானோ
இன்று
என்
தள்ளாமைக்கு
தோள் கொடுப்பாய்
என இருந்தேன்
வேறு வழியில்லை
வாக்கிங் ஸ்டிக்
வாங்கிக் கொண்டேன்
என் தோள்மேல் தூக்கி
உன்னை கடவுளை தரிசிக்க
சொன்னேன்
அதனால் தானோ என்னவோ
எனக்கு
அவன்
அருள் கிடைக்கவில்லை
உன்னோடு
பேசிக்கொண்டே இருந்தேன்
நீ பேச்சுப் பழக
இன்று தொணதொணப்பாகிக் போனேனே
உயிர் போகாமல்
இருக்கேனே
ஊரெல்லாம்
கடன்பட்டேன்
உன் உயர்வுக்காக
பெற்ற கடன்
தீர்ப்பாயா?
நீ
சபையில்
உன்
தோளில்
மாலை
என்
தோளில்
நுகத்தடி
மகிழ்ச்சிதான்
மகனே
உன் மனைவி
உன் மகன் ஊர்வலமாய்
நீங்கள்.
எனக்காக
ஒன்றே ஒன்று மட்டும்
செய்
என் பேரனை
நல்ல மகனாய்
வளர்த்து விடு
போதும் எனக்கு.
No comments:
Post a Comment