Tuesday, April 5, 2011

நட்பு

நட்பு 



நட்பு
வளர்பிறை மட்டுமே உள்ள
வானம்

உறவுகள் கசப்பாய்
நட்போ இனிப்பாய்

நெல்லிக்கனியை
நட்பிடம் மட்டுமே
கொடுத்தானே அதியமான்.

அங்கவை,சங்கவையை
தங்க வைத்து
தாலிபாக்கியம்
யார் வாங்கிகொடுத்தார்
கபிலர் தானே

தானம் கொடுத்தவன்
தானம் பெற்ற வரலாறு
கர்ணன் துரியோதன்
நட்பல்லவா

வறுமை
வாட்டிய போது
குசேலன்
எங்குச் சென்றான்
தாய் வீடா
மாமன் வீடா
கண்ணணைத் தானே
கண்டான்

“ஈயென இரத்தல்
இழிந்தது”
என்பதால்
மெளனமாய் வந்தான்
குசேலன்

அதிசயித்தான் – தன் வீடு
மாளிகை யானதைக்
கண்டு

மறுக்கவில்லை
உறவுப் புள்ளிகள்
சேர்ந்துதான் என் வட்டம்
ஆனால்
நட்பே நீ
மையப் புள்ளியல்லவா1

மகனின்
நலம் விசாரிப்பு
ஈமெயில் சிக்கனம்
அறுபது வயதிலும்
அருகே அமர்ந்து
ஆறுதல் சொல்வது
நட்பு மட்டுமே.

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...