உன் மீது
பூ விழும், பூவை
எடுத்துக்கொள்
கல் விழும்
கல்லை எடுத்துக்கொள்
கற்களெல்லாம் பூவாக
மாறும் எனக்கனவு காணாதே
நீச்சலில் எதிர்நீச்சலும்
சுகமே
வாழ்க்கையும்,அனுபவமும்
அப்படியே
யாரும் உன்னிடம்
நடித்தால் கலங்காதே
இறுதிக் காட்சி வரை
ரசித்து விட்டுப் போ
பலவருடத் தோழமை கூட
ஒருநாள்
உன்னைப் பற்றிய கேவலமான
சான்றிதழ் தரக்கூடும்
வாங்கி வைத்துக் கொள்
ஒருநாள் நல்லவிதமான
சான்றிதழ் தரக்கூடும்
அதையும் வாங்கிக் கொள்
இரண்டையும் ஒப்பிட்டுப்பார்
சத்தமாய்ச் சிரித்து விடு
ஏனெனில் இரண்டும் உண்மையில்லை
யாராலும் உனக்கு
மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்க
முடியாது
ஏனெனில்
உனக்கே உன்னால் மகிழ்ச்சியை
தரமுடியாதபோது எப்படி
இன்னொருவரால் முடியும்.
இனிப்பு,கசப்பு,துவர்ப்பு,உவர்ப்பு
இதில் எதை நீக்கினால் சுவை
எல்லாமே சுவைதான்
வாழ்க்கையும் அப்படியே.
உன்னை யாரும் துன்புறுத்த முடியாது
நீ அனுமதிக்காத வரை
No comments:
Post a Comment