Tuesday, June 7, 2011

நின்னைச் சில வினாக்கள் கேட்பேன்



நின்னைச் சில வினாக்கள் கேட்பேன்

















நின்னைச் சில வினாக்கள் கேட்பேன்
என்னை எதற்கு நீ படைத்தாய்?
ஏன் இன்னும் உயிரோட்டம் கொடுத்தாய்?
மெத்த படிக்க வைத்தாய்
மேதாவியாய் உலவ விட்டாய்
நித்தம் உனை நினைக்க
நீங்காத துன்பம் எனக்களித்தாய்
நீர்க்குமிழிபோல் வாழ்வென்றாய்
எப்பொழுது உடையும் என்பதிலேயே
என் சிந்தையை வைத்தாய்
எனக்கும் உனக்கும் இடையில்
யார் யாரையே வைத்தாய்
அவாகள் உனக்கும் எனக்கும்
எதிரியா? நண்பனா? என
சொல்லாமல் விட்டாய்
வளமான வாழ்வெனக்காட்டி
இருட்டிலேயே தேடவைத்தாய்
உயிருக்கும் உணவுக்குமே போராட்டமாய்
உத்தமன் நீ உயிர் வாழ்வாய் என
ஒரு சொல்லோடு
எனை தனியனாய் விட்டாய்
காதல் எனக்களித்தாய் - அதுவரை
உறவறுத்து காட்டில் தவம் செய் என்றாய்
தவத்தில் நாட்டமில்லை, காதலில் இன்பமில்லை
என்னதான் நினைத்தாய் என்னை!
என்னை எப்படியாகியும் செய்துவிட்டு போ!
நித்தம் உத்தமனாய் வாழ்ந்திட வை இறைவா.

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...