Tuesday, June 7, 2011

யாசகன் மனம் அறிக


                    யாசகன் மனம் அறிக




பசியாத நல்வயிறு
உலகிலில்லை
பசித்த பாழ் வயிறு
உலகில் உண்டு

ஒரு கோடி பணம்
ஆகாரமில்லாத தீவு
ஒரு கவளம் சோறு
உன் வயிறோ
பசித்த வயிறு
எது வேண்டும் உனக்கு
உணவா? பணமா?

அஃறினையாய் இருந்தவரை
உணவுக்கு பஞ்சமில்லை
உயர்திணை யானோம்
உணவுக்கு வழி இல்லை.

நடைபாதை மனிதர்க்கு
முகம் சுளிக்கும் மனிதர்களே
பூமி புரட்டிப் போட்டால்
நீயும் நானும் ஒரே ஜாதி
நினைவில் கொள்க.

1 comment:

  1. யாசகன் மனம் அறிக என்று நீவிர்
    வடித்த இந்த வைர வரிகள்
    என்னை மீளாச் சிந்தனையில் ஆழ்த்தி உள்ளது.
    "நடைபாதை மனிதர்க்கு
    முகம் சுளிக்கும் மனிதர்களே
    பூமி புரட்டிப் போட்டால்
    நீயும் நானும் ஒரே ஜாதி
    நினைவில் கொள்க"

    இந்த வரிகள்
    வாழ்வில் நாம் என்றும் கொள்ள வேண்டியது
    கர்ம சிந்தனையை வளர்க்க இது ஒன்றே போதும்.

    அன்புடன்
    செந்தில் குமார்

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...