Sunday, October 21, 2012


           மழை

 
உன்னால் நனைந்தும்
தலை துவட்டாத மரங்கள்

மூழ்கும் என உணர்ந்தும்
சிறுவர்கள் விடும் காகித கப்பல்கள்

நனைந்தும் நனையாத
குடையின் சாரல் சுகம்

உன்னால் முத்துக்கள் பூக்கும் பூக்கள்

இறைவன் வரைந்த வட்ட வட்ட ஓவியம்
குளத்தில் பெய்த உன் ஒரு துளி

கடலில் ஆவியாகி வானம் சென்றாலும்
பூமிக்கு மறவாமல் வந்து செல்லும் விருந்தாளி

கொடுப்பது நீ கொள்வது நாங்கள்
இடைத்தரகர் இல்லாத இலவசம் நீ

நீ பொழிந்தால் இந்த பூமி பூக்காடு
நீ மறுத்தால் இந்த பூமி இடுகாடு

2 comments:

  1. naan indha kavithayil nanaindhu thalai duvatamal thalaithuvatamal irukkiren

    ReplyDelete
  2. very nice kavithai kavingara

    i like this kavithai kavingara

    keep writing

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...