காற்றில் பறந்த கவிதை
மழையின் போது விரியாத குடை மழை நின்றதும் விரிந்ததைப்போல்
ஜன்னல் ஓரம் அமர்ந்திட நினைக்கையில் ஊர் வந்து சேர்ந்ததைப்போல்
நடை சாத்திய பின் கடவுளை தரிசிக்க சென்ற பக்தனைப்போல்
பணம் வந்தும் பத்தியம் இருக்கவேண்டிய நோயாளியைப்போல்
வேலை தேடிச் சென்ற கம்பெனி காணமல் போனதைப்போல்
காதுக்கம்மல் வாங்க போனபோது கழுத்து சங்கிலி களவாடப்பட்டது போல்
தாகம் எடுக்கையில் தேங்கி கிடக்கும் நீர் கானல் நீரானதைப்போல்
பிடிக்க நினைக்கையில் பறந்து போன ஒரு பட்டாம் பூச்சியைப்போல்
காதலைச் சொன்னபோது கல்யாணப் பத்திரிக்கையை நீட்டியவள்
காற்றில் பறந்தது எனக்கான கவிதை
சிந்தனைச் செல்வரே,
ReplyDeleteஇது கவிதையே அல்ல,
உப்பு விற்க செல்கையில் மழை வந்ததை போல,
பொரி விற்க செல்கையில் காற்று வீசுதல் போல,
கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு சென்றால் அங்கு இரண்டு கொடுமைகள் டிங்கு டிங்கு என்று ஆடுதாம் என்று பெரியோர் சொல்லக் கேட்டதுண்டு.
உமது உள்ளக் கிடக்கையை கவிதை வாயிலாக சொல்லுவதில் உமக்கு நிகர் நீரே!
நீவிர் வாழ்க வளமுடன்.
அன்புடன்,
செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி-14
அன்புள்ள கவிஞரே,
ReplyDeleteநம் தமிழ் நாட்டிற்கு மற்றுமோர் உவமை கவிஞர் கிடைத்து விட்டார்.
கவிஞர் சுரதாவிற்கு அடுத்த படியாக...
அவர் திருவாளர். முல்லைராஜன் அவர்களே தான்.
சிறந்ததோர் உவமைக் கவிதை இது.
அன்புடன்
செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி-14