வளையல்
( ஒரு மகள் தன் தாய்க்கு எழுதும் கவிதை )
சில
வாரங்களாக வளையல்
அணிவதில்லை அம்மா
கவரிங் ஒத்துக்கொள்ளாமல்
கறுத்துப்போனது கைகள்
வெறுங்கையுடன்
காண்கையில்
கவலையில் ஆழ்கிறேன்
என்
கல்லூரி கட்டணத்திற்காக
கழட்டப்பட்டது
நான்
வேலைக்குப் போன
முதல் மாத சம்பளத்தில்
அவளுக்கென்று வாங்கிய வளையல்
அணிய மறுக்கிறாள்
அன்பு ஒன்றும் கடனில்லை பெண்ணே என்கிறாள்
என் கையில் ஆசையாய் அணிவிக்கிறாள் .
No comments:
Post a Comment