Tuesday, October 16, 2012

 

                  வளையல்

              ( ஒரு மகள் தன் தாய்க்கு எழுதும் கவிதை ) 



சில
வாரங்களாக வளையல்
அணிவதில்லை அம்மா

கவரிங் ஒத்துக்கொள்ளாமல்
கறுத்துப்போனது கைகள்

வெறுங்கையுடன்
காண்கையில்
கவலையில் ஆழ்கிறேன்

என்
கல்லூரி கட்டணத்திற்காக
கழட்டப்பட்டது

நான்
வேலைக்குப் போன
முதல் மாத சம்பளத்தில்
அவளுக்கென்று வாங்கிய வளையல்
அணிய மறுக்கிறாள்

அன்பு ஒன்றும் கடனில்லை பெண்ணே என்கிறாள்
என் கையில் ஆசையாய் அணிவிக்கிறாள் .

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...