பெட்டி நிறைய பணம் அடுக்கி அழகு பார்த்தாலும்
சந்தன கட்டையை அடுக்கி வேகவைத்தாலும்
போன உயிர் போன உயிர் தான் உணரவில்லிங்க
என்னனவோ கண்டுபுடிசிங்க குலோநிங்னு பெயர் வச்சிங்க
எழவு விழாம இருக்க என்ன செஞ்சிங்க
முட்டாளுன்னு அறிவாளின்னு பிரிச்சுப்பார்த்திங்க
சாவுல ஒண்ணுதான்னு உணரவில்லைங்க
ஒழச்சு ஒட்டிய வயிறு உழைக்காம உப்பிய வயிறு
உயிர் போகையில எல்லாம் ஒண்ணுங்க
மேக்கப்போட்டு மினுமினுன்னு மேனிவைச்சாலும்
உயிர் போகையில நாறுமின்னு உணரவில்லிங்க
இருக்கும் வரைக்கும் ஆகாயத்துல பறந்துபார்தாலும்
மரணம் வந்தா மண்ணுலதான் மக்கிப்போகணுங்க
வாழுரவரை கூட வாழுறவனுக்கு நல்லது செஞ்சுட்டு
மரணம் வந்தா நல்ல கதி அடையவேனுங்க .
அன்புள்ள கவிஞரே,
ReplyDeleteஏன் உங்களின் ஐம்பதாவது கவிதையை எடுத்துவிட்டீர்கள்?
நிலையாமையை உணர்துவதற்காகவா?
நாம் வாழும் வரை
நம்முடன் வாழ்பவர்களுக்கு
நன்மைகள் பல செய்தால்
நாமும் நல்ல கதி அடையலாம் என்று
மிகவும் அருமையாக சொல்லியுளீர்கள்.
மிகவும் அருமையான அழகான கைதியை தந்த கவிஞருக்கு நன்றி!
அன்புடன்
செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி-14