Tuesday, November 13, 2012

                   விடியல் 



சூரியன்  ஒளிந்துகொள்ளப்போகிறான் 
மலைமுகட்டின் மங்கலான வெளிச்சத்தில் 
கிளைபரப்பி நிற்கிறான் 
இன்னும் சற்று நேரத்தில்இரவு  தொடங்கிவிடும்
முன்பெல்லாம் நிலாவையும்  நட்சத்திரங்களையும்  
ரசித்த கண்கள் சலித்துப் போகின்றன 
நொடிகள் நத்தை என நகர மணித்துளிகள் 
யுகங்கலென காட்சியளிக்க 
சகித்துக்கொள்ள இயலவில்லை 
எத்தனை நேரம் தான் 
உறக்கம் வராத முன்னிரவிலோ அல்லது 
உறக்கம் கலைந்த பின்னிரவிலோ விழித்திருப்பது 
கண்களில் அயர்ச்சி ,தனிமை 
பயமுறுத்தும் இருள் தாங்கமுடிவதில்லை 
அடுத்தநாள் விடியலைக்கான 
ஆவலுடன் காத்திருக்கிறேன் .

4 comments:

  1. பெரும்பாலும் கவிஞர்கள் இரவின் காதலர்களாக இருப்பார்கள்....

    ஆனால், நீங்கள் விடியலுக்குக் காத்துக்கிடந்திருப்பதை கண்டு நான் என்ன சொல்லட்டும் .....

    என்னைப் பொருத்தவரை விடியல் அழகு தான் ... விடியல் மட்டும் தான் ....



    ReplyDelete
  2. இனிய கவிஞரே,

    இது சற்றே உமது கவிதைகளில் இருந்து வித்தியாசப்படுகிறது.
    எனினும் இது மிகவும் அருமையாக உள்ளது.
    வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    கே. செந்தில்குமார்

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...