Sunday, October 21, 2012


           மழை

 
உன்னால் நனைந்தும்
தலை துவட்டாத மரங்கள்

மூழ்கும் என உணர்ந்தும்
சிறுவர்கள் விடும் காகித கப்பல்கள்

நனைந்தும் நனையாத
குடையின் சாரல் சுகம்

உன்னால் முத்துக்கள் பூக்கும் பூக்கள்

இறைவன் வரைந்த வட்ட வட்ட ஓவியம்
குளத்தில் பெய்த உன் ஒரு துளி

கடலில் ஆவியாகி வானம் சென்றாலும்
பூமிக்கு மறவாமல் வந்து செல்லும் விருந்தாளி

கொடுப்பது நீ கொள்வது நாங்கள்
இடைத்தரகர் இல்லாத இலவசம் நீ

நீ பொழிந்தால் இந்த பூமி பூக்காடு
நீ மறுத்தால் இந்த பூமி இடுகாடு

Friday, October 19, 2012

 

         இது என்ன காதல்


பார்க்கும் போது சிரிப்பாள்
பார்வையாலே கொல்வாள்

பேசச்சொல்லி கேட்ப்பாள்
பேசாமல் இரசிப்பாள்

நகங்கள் உரசிக்கொள்ள செய்வாள்
நட்பென்று நகைப்பாள்

சுற்றிச் சுற்றிச் வருவாள்
சுற்றம் என சொல்வாள்

கள்ளில் இல்லை போதை அவள்
கண்ணில் உள்ளது போதை

இதழோர சிரிப்பில் என்
இதயம் தொலையும்

மூச்சு முட்ட காதல்
மூச்சு விட்டதில்லை யாரிடமும்

இரகசியமாய் காதல் என்னை
இரகசியமாய் கொல்ளும்

மொட்டவிழ்த்தால்  உதிர்ந்திடுமென காதல்
மொட்டவிழிக்கவில்லையோ பெண்ணே ?



Tuesday, October 16, 2012

 

                  வளையல்

              ( ஒரு மகள் தன் தாய்க்கு எழுதும் கவிதை ) 



சில
வாரங்களாக வளையல்
அணிவதில்லை அம்மா

கவரிங் ஒத்துக்கொள்ளாமல்
கறுத்துப்போனது கைகள்

வெறுங்கையுடன்
காண்கையில்
கவலையில் ஆழ்கிறேன்

என்
கல்லூரி கட்டணத்திற்காக
கழட்டப்பட்டது

நான்
வேலைக்குப் போன
முதல் மாத சம்பளத்தில்
அவளுக்கென்று வாங்கிய வளையல்
அணிய மறுக்கிறாள்

அன்பு ஒன்றும் கடனில்லை பெண்ணே என்கிறாள்
என் கையில் ஆசையாய் அணிவிக்கிறாள் .

Friday, October 12, 2012

       காற்றில் பறந்த கவிதை



மழையின் போது விரியாத குடை மழை நின்றதும் விரிந்ததைப்போல்

ஜன்னல் ஓரம் அமர்ந்திட நினைக்கையில் ஊர் வந்து சேர்ந்ததைப்போல்

நடை சாத்திய பின் கடவுளை தரிசிக்க சென்ற பக்தனைப்போல்

பணம் வந்தும் பத்தியம் இருக்கவேண்டிய நோயாளியைப்போல்

வேலை தேடிச் சென்ற கம்பெனி காணமல் போனதைப்போல் 

காதுக்கம்மல் வாங்க போனபோது கழுத்து சங்கிலி களவாடப்பட்டது போல்

தாகம் எடுக்கையில் தேங்கி கிடக்கும் நீர்  கானல் நீரானதைப்போல்

பிடிக்க நினைக்கையில் பறந்து போன ஒரு  பட்டாம்  பூச்சியைப்போல்

காதலைச்  சொன்னபோது  கல்யாணப் பத்திரிக்கையை   நீட்டியவள்

காற்றில் பறந்தது எனக்கான கவிதை 

Saturday, October 6, 2012


                       பொம்மை



கேட்ட பொம்மையை
வாங்கித்தராமல்
ஏதோ ஒரு பொம்மையை
வாங்கித்தந்த
அப்பாவை திட்டித்தீர்த்தது
அந்நாளில்
இந்நாளில்
பிடிக்கவில்லையென
மகன் தூக்கி எறியும்
பொம்மை சொல்லிவிட்டு போகிறது
ஏதோ .  

Friday, October 5, 2012

                      நிலையாமை             



பெட்டி நிறைய பணம் அடுக்கி அழகு பார்த்தாலும்
சந்தன கட்டையை அடுக்கி வேகவைத்தாலும்
போன உயிர் போன உயிர் தான் உணரவில்லிங்க

என்னனவோ கண்டுபுடிசிங்க குலோநிங்னு பெயர் வச்சிங்க
எழவு விழாம இருக்க என்ன செஞ்சிங்க

முட்டாளுன்னு  அறிவாளின்னு பிரிச்சுப்பார்த்திங்க
சாவுல  ஒண்ணுதான்னு உணரவில்லைங்க

ஒழச்சு ஒட்டிய வயிறு உழைக்காம உப்பிய வயிறு
உயிர் போகையில எல்லாம் ஒண்ணுங்க

மேக்கப்போட்டு மினுமினுன்னு மேனிவைச்சாலும்
உயிர் போகையில நாறுமின்னு உணரவில்லிங்க

இருக்கும் வரைக்கும் ஆகாயத்துல பறந்துபார்தாலும்
மரணம் வந்தா மண்ணுலதான் மக்கிப்போகணுங்க

வாழுரவரை கூட வாழுறவனுக்கு நல்லது செஞ்சுட்டு
மரணம் வந்தா நல்ல கதி அடையவேனுங்க .  

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...