Monday, January 24, 2022

மனம்


 மனம்

உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே

பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம்

இருட்டில் இருந்துற வெளிச்சம் பார்த்த மனமே வெளிச்சத்திலும் இருண்டு போகுமே

நட்பு ,உறவில் உரசிப்பார்த்து உரசிப்பார்த்து நித்தம் ஒரு சரி தவறு என மாறி மாறி குழம்பி நிற்பதும்  மனம்

விரும்பிய காரணம் சொல்லும் அதே மனம் வெறுக்கும் பட்டியல் வெளியிட அட அந்த மனமா இந்த மனம்

கள்வன் கயவன் நல்லவன் நாணயஸ்தன் எல்லோரையும் தான் நல்லவன் என நம்பவைக்கும் இந்த மனம்

எல்லோருக்குள்ளும் கொஞ்சம் அன்பு கொஞ்சம் நஞ்சு உள்ளே உலவும் இந்த மனம் மனித விசித்திரம்

இப்போதெல்லெம் எல்லோரிடமும் இருப்பது மனம் மட்டுமே மனசாட்சி என்பதெல்லாம் பழங்கதையாய் போனதே.....

-பூ.முல்லைராஜன்

Thursday, August 19, 2021

மனிதா நீ கொஞ்சம் மாறிவிடு



விலங்கு நடந்தால் காடு செழிக்கும்

மனிதன் நடந்தால் புற்கள் கூட மிஞ்சுவதுண்டா

வருமானத்து அதிகமான சொத்து சேர்த்த வழக்கு  எந்த விலங்கின் மீதாவது இதுவரை உண்டா

சிரித்துக்கொண்டே கழுத்தறுக்கும் மனிதருண்டு

சிரித்துக்கொண்டே கழுத்தை கடித்த சிங்கம் கேள்விப்பட்டதுண்டா

அடுத்த வேளை உணவுவரை விலங்குகள் வேட்டையாடுவதில்லை

அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து சொத்து சேர்க்காதா மனிதனுண்டா

தான் வாழும் காட்டை விலங்கு வாழ வைக்கும்

தான் வாழும் நிலத்தை மனிதன் வாழ வைத்தானா

குழந்தையை வெறுத்த மனிதனுண்டு

குட்டியை வெறுத்த விலங்குண்டா

விலங்கு நேரடியாக தாக்கும் மனிதரைப் போல் வலை பின்னி வீழ்த்துமா

அது கூட்டமாக கூடி வாழும் கூடி உண்ணும் 

மனிதன் கலவரம் தவிர மற்ற நேரங்களில் கூடியிருக்கிறானா


குதிரையை யானையை போருக்கு துணையாக அழைத்த மனிதா

அதன் வேட்டைக்கு துணையாய் என்றாவது உன்னை அழைத்ததுண்டா

நரிபோல தந்திரம் என்றானே

தந்திரம் செய்வது நரியின் குணமல்ல அது மனிதனின் குணம் அறிவோமா

மனிதா வாழ்க்கையைக் கொஞ்சம் விலங்கிடமிருந்தும் விளங்கிக்கொள்...


        

எல்லாம் நினைவிலிருக்கிறது

 



நான் இருக்கும் இடமெல்லாம்

நீ வந்தது


எதையாவது என்னிடமிருந்து கேட்டுப்பெற்றது

அவை என் நினைவின் சேகரிப்பு என நான் அறியாதது


ஆட்டோகிராபின் கடைசி பக்கத்தில் நீ எழுதியது

எடுத்துப்பார்க்க ஏதுவானது என நான் அறியாதது


நான் கோபமாய் பேசியது

நீ மௌனமாய் அழுதது


கடைசியாய் நான் உன்னை வழியனுப்பியது அப்போது நீ என்னை வாழ்த்தியது


எல்லாமே முற்றுப் பெறாத ஓவியமாய் முடிந்து போனது


சொற்களை வாரி இரைக்கும் இவளை நினைக்கையில்

 உன் மௌனம் நினைவில் வந்து போகும்


வாழ்வில் எப்போதாவது சந்தித்தால் கேட்கலாம் என்றிருக்கிறேன்

இது போல நீயும் நினைத்ததுண்டா


என்னைப் போல் அல்லாமல் வாழ்வோடு நீயாவது பொருந்திப்போனாயா?



                  

Wednesday, November 11, 2020

தனிமை

 





அந்த ஒற்றையடிப்பாதையில்எத்தனையோ வளைவுகள்அத்தனையும் காயங்கள்

சுமையாகுமோ என அஞ்சிவழித்துணையை நாடியதில்லை நான்

எத்தனையோ வருடங்களைகடந்த பின்னும்என்னுள் சிறு துளியாய்தங்கியுள்ளது என் தனிமை

மேகங்களின் நிழல்கள் எனசில நேரங்களில் சோகங்களில்யகரைந்து போயிருக்கிறேன்

வெயில் நாட்களில்மழை வேண்டியும் மழை நாட்களில் வெயில் வேண்டியும் நான் நின்றதில்லைகடவுள் கொடுத்ததை

மகிழ்ச்சியோ துன்பமோ அப்படியே அள்ளிக்கொண்டிருகிறேன்

எத்தனையோசுகங்களுக்குபின்னும் என்னுள் ஒளிந்துகொண்டிருக்கிறது சோகமயமான தனியாய் பயணித்த  அந்த ஒற்றையடிப்பாதை.                        

அப்பா

 அப்பா







விரல் பிடித்து நடக்கும் பருவத்திலும்தோளிலே சுகமாய் சுமப்பவர் அப்பா

நிஜ ஹீரோக்கள் எப்பொழுதும்ஆரவாரமில்லாத அப்பாவாகத்தானிருப்பார் 

இந்தியாவின் இரு முகம் போல்வறுமையில் அவரையும்வசதியில் உன்னையும்வைத்திருப்பார்

தன்னிலும் மேம்பட்டவனாய்உருவாக்க தன்னையே மறப்பார்

ஒரு சௌகர்யமான ஆசிரியர்அல்லது ஒரு நூலகம்ஒவ்வொருவரின் அப்பாவாகத்தான் இருக்க முடியும்

சில நேரங்களில் கடிந்து கொள்வதும்பல நேரங்களில் வருந்தி தவிப்பதும் அவரே

இருவேறு கருத்துக்கள்நிலவும் போதுநீ வளர்ந்து விட்டதாய் பெருமிதம் கொள்வார்

ஒருவனின் அத்தனை வெற்றிக்குப் பின்னும் ஒளிந்திருக்கும் ஒற்றை தியாகம் அப்பா

Wednesday, November 4, 2020

மீண்டும் நினைக்கையில்



நான் ரசித்த பாடல் வரிகளை மீண்டும் கேட்கையில் அவை யாரோ யாருக்காகவோ எழுதப்பட்டதை உணர்கிறேன்

காதல் கடிதங்களின்தூவிய பொய்களில் சிக்கிய மனதை எண்ணி துயருருகிறேன்

பழகிய இடங்கள் கண்ணில்படுகையில் பாலையில் நடக்கும் துயரடைகிறேன்

மொத்த உண்மையையும் சொன்னதினால் அவை வாக்குமூலமாக அமைந்த என் முட்டாள்தனம் உணர்கிறேன்

எல்லா அதிகாரத்தையும் உன்னை பெருமைப்படுத்த உனக்களித்த பின் தான் உணர்கிறேன் வரம் கொடுத்த சாமியின் சங்கடம்

வெறுமையை இட்டு நிரப்பமுட்செடியை தேர்ந்தெடுத்த முட்டாளாய் ஆனதன் பின்னனி எண்ணி மனம் வெறுக்கிறேன்

காத்திருந்தது வீழ்த்தும் கயமை காதலுக்கும் உண்டா 

காதல் தந்திரமானது

விலங்குகள் செய்யாதது 

ஒன்றை வீழ்த்தி ஒன்றை உண்ணும் 

மனித இனத்தின் நீட்சியாய் அமைந்தது

             

Wednesday, October 7, 2020

கடைசியாய்...


இன்னும் கொஞ்சநாள் மிச்சமிருக்கும் காதலையும் உன்னிடமே கொடுத்து விடுகிறேன்

அதற்கு முன் சில.... மகிழ்ந்த தருணங்கள் என்ற மிகப்பெரிய நினைவூட்டலை நான் உனக்குத்தரப்போவதில்லை.. 

பிரிவது என்றானபின் சொற்களின் விரயம் தவிர்க்க விரும்புகிறேன்

உன்னிடம் மட்டும் பகிர்ந்துகொண்ட விஷயங்களை ஒரு துரோகியைப் போல் தருணத்திற்காக காத்திருந்து பழி தீர்த்தது மிகுந்த வலியைத் தருகிறது

நான் கொடுத்த அத்தனை ஆயுதத்தையும் என் மீதே எறிந்துவிட்டாய்

அதைக் கூட சகித்துக்கொள்வேன் அந்த ஏளன சிரிப்பை எப்படி சகிப்பேன்

மனிதர்கள் மீதான நம்பிக்கை இழப்பிற்கு நீயா உதாரணம்... 

வேண்டாம் அடுத்த தலைமுறை உன்னைப் பார்த்தால் காதல் கொள்ள அஞ்சும்....

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...