Wednesday, November 11, 2020

தனிமை

 





அந்த ஒற்றையடிப்பாதையில்எத்தனையோ வளைவுகள்அத்தனையும் காயங்கள்

சுமையாகுமோ என அஞ்சிவழித்துணையை நாடியதில்லை நான்

எத்தனையோ வருடங்களைகடந்த பின்னும்என்னுள் சிறு துளியாய்தங்கியுள்ளது என் தனிமை

மேகங்களின் நிழல்கள் எனசில நேரங்களில் சோகங்களில்யகரைந்து போயிருக்கிறேன்

வெயில் நாட்களில்மழை வேண்டியும் மழை நாட்களில் வெயில் வேண்டியும் நான் நின்றதில்லைகடவுள் கொடுத்ததை

மகிழ்ச்சியோ துன்பமோ அப்படியே அள்ளிக்கொண்டிருகிறேன்

எத்தனையோசுகங்களுக்குபின்னும் என்னுள் ஒளிந்துகொண்டிருக்கிறது சோகமயமான தனியாய் பயணித்த  அந்த ஒற்றையடிப்பாதை.                        

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...