Thursday, August 19, 2021

எல்லாம் நினைவிலிருக்கிறது

 



நான் இருக்கும் இடமெல்லாம்

நீ வந்தது


எதையாவது என்னிடமிருந்து கேட்டுப்பெற்றது

அவை என் நினைவின் சேகரிப்பு என நான் அறியாதது


ஆட்டோகிராபின் கடைசி பக்கத்தில் நீ எழுதியது

எடுத்துப்பார்க்க ஏதுவானது என நான் அறியாதது


நான் கோபமாய் பேசியது

நீ மௌனமாய் அழுதது


கடைசியாய் நான் உன்னை வழியனுப்பியது அப்போது நீ என்னை வாழ்த்தியது


எல்லாமே முற்றுப் பெறாத ஓவியமாய் முடிந்து போனது


சொற்களை வாரி இரைக்கும் இவளை நினைக்கையில்

 உன் மௌனம் நினைவில் வந்து போகும்


வாழ்வில் எப்போதாவது சந்தித்தால் கேட்கலாம் என்றிருக்கிறேன்

இது போல நீயும் நினைத்ததுண்டா


என்னைப் போல் அல்லாமல் வாழ்வோடு நீயாவது பொருந்திப்போனாயா?



                  

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...