Wednesday, November 4, 2020

மீண்டும் நினைக்கையில்



நான் ரசித்த பாடல் வரிகளை மீண்டும் கேட்கையில் அவை யாரோ யாருக்காகவோ எழுதப்பட்டதை உணர்கிறேன்

காதல் கடிதங்களின்தூவிய பொய்களில் சிக்கிய மனதை எண்ணி துயருருகிறேன்

பழகிய இடங்கள் கண்ணில்படுகையில் பாலையில் நடக்கும் துயரடைகிறேன்

மொத்த உண்மையையும் சொன்னதினால் அவை வாக்குமூலமாக அமைந்த என் முட்டாள்தனம் உணர்கிறேன்

எல்லா அதிகாரத்தையும் உன்னை பெருமைப்படுத்த உனக்களித்த பின் தான் உணர்கிறேன் வரம் கொடுத்த சாமியின் சங்கடம்

வெறுமையை இட்டு நிரப்பமுட்செடியை தேர்ந்தெடுத்த முட்டாளாய் ஆனதன் பின்னனி எண்ணி மனம் வெறுக்கிறேன்

காத்திருந்தது வீழ்த்தும் கயமை காதலுக்கும் உண்டா 

காதல் தந்திரமானது

விலங்குகள் செய்யாதது 

ஒன்றை வீழ்த்தி ஒன்றை உண்ணும் 

மனித இனத்தின் நீட்சியாய் அமைந்தது

             

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...