நான் ரசித்த பாடல் வரிகளை மீண்டும் கேட்கையில் அவை யாரோ யாருக்காகவோ எழுதப்பட்டதை உணர்கிறேன்
காதல் கடிதங்களின்தூவிய பொய்களில் சிக்கிய மனதை எண்ணி துயருருகிறேன்
பழகிய இடங்கள் கண்ணில்படுகையில் பாலையில் நடக்கும் துயரடைகிறேன்
மொத்த உண்மையையும் சொன்னதினால் அவை வாக்குமூலமாக அமைந்த என் முட்டாள்தனம் உணர்கிறேன்
எல்லா அதிகாரத்தையும் உன்னை பெருமைப்படுத்த உனக்களித்த பின் தான் உணர்கிறேன் வரம் கொடுத்த சாமியின் சங்கடம்
வெறுமையை இட்டு நிரப்பமுட்செடியை தேர்ந்தெடுத்த முட்டாளாய் ஆனதன் பின்னனி எண்ணி மனம் வெறுக்கிறேன்
காத்திருந்தது வீழ்த்தும் கயமை காதலுக்கும் உண்டா
காதல் தந்திரமானது
விலங்குகள் செய்யாதது
ஒன்றை வீழ்த்தி ஒன்றை உண்ணும்
மனித இனத்தின் நீட்சியாய் அமைந்தது
No comments:
Post a Comment