அணு ஆயுதம் தயாரித்த நாடுகள் எல்லாம்
பாதுகாப்புக்கு முகக் கவசங்கள் தயாரிக்க ஆரம்பித்து விட்டன
உலகமயமாதல் தாராளமயமாதல் பட்டியலில் கொரோனோ சேருமென யாரும் யோசிக்க கூட இல்லை
கண்ணுக்கு தெரியாத எதிரியோடு எப்படி போராடுவது எத்தனை நாள் போராடுவது என்ற குழப்பத்தில் தவிக்கிறான் மனிதன்
விலங்கு, ஊர்வன, பறப்பன என விரட்டி விரட்டி வேட்டையாடிய மனிதனை விரட்டுகிறது இவற்றில் ஏதோ ஒன்று
நாளை கேள்ளிக்குறி என்றான போதும் பதுக்கல்காரனின் தன்னம்பிக்கை வியக்கவைக்கிறது
எங்கு காணினும் அச்சம்
எவர் முகத்திலும் பீதி
எந்த பொருளிலும் வைரஸ் காற்றில் விஷம் கனவிலும் கானாத கொடுமை
"சைவம்தான்" என்று சொன்னவன் ஒரு வேளை சரியாகத் தான் சொல்லியிருப்பானோ
விரல் ரேகை பதிவில் அத்தனையும் சாத்தியமா வியந்து முடிக்கையில் கொரோனாவும் அங்கேதான் வியப்பேது இன்றைய சரி நாளைய தவறு இதுதான் விதி
மனிதன் தவறும் போது கடவுள் தண்டிப்பது கதைகளில் மட்டுமே
என்னை தேடி நீ வரவேண்டாம் என்கிறான் இறைவன்
உன்னைக் காக்க
உன் உள்ளத்தில் இல்லத்தில் இருக்கிறேன் என்கிறான் இறைவன்...
No comments:
Post a Comment