Sunday, August 14, 2016

                             பயணம் 

அன்பை அள்ளிக்கொடுத்து
அன்பிற்காக ஏங்கி நிற்பது
அருவறுக்கத்தக்கது

ஒவ்வொரு கிளையாக
பட்டுப்போவதுபோல்
ஒவ்வொரு உறவையும் விட்டு
விலகுகிறேன்

எனது முகமூடி கூட
என் பேச்சைக்  கேட்பதில்லை
எனக்கே தெரியாமல் கழண்டு விழுகிறது

பிரிவிற்கான காலத்திற்காக காத்திருப்பது
மிகுந்த வலியைத்தருகிறது

கடமை கடமை என துரத்தும் போது
கடனே என வாழ நேர்கிறது

யார் யார் ஏவலுக்கோ
நடனமாடும் பொம்மையாய்
வாழ்வில் கழிவிறக்கம் திண்கிறது

எதையோ தேடி எதையோ தொலைத்து
இன்னும் எத்தனை தூரம் பயணிக்க
என்ற பெருமூச்சுடன் நகர்கிறது
என் காலம் .


No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...