Thursday, July 21, 2016

                       ஜன்னலுக்கு வெளியே

முதல் அறிமுகம் , முதல் முத்தம் போல்
முந்தைய சந்திப்புகள் தித்திப்பாய் நகர்ந்தன .

இரவின் நீளம் ,  அதிகாலைக் கனவு
என அதிகம் பகிர்ந்து கொண்டோம்

சில பொழுதுகள் செல்பேசிகள் மட்டுமே அறிந்த
செல்ல சிணுங்கல்கள்

நித்தம் ஒரு உடையில் தேவதையாய் நீ
அந்த சந்திப்பில் தொட்டு பேசும் எண்ணமும்
தொடாத நாகரிகமுமாய் நான்

சில நாட்களாய் சிணுங்கவில்லை
உன் செல்பேசி

பேச்சில் ஏதேனும் காயப்படுத்திவிட்டேனோ!
மிகுந்த ஒத்திகைக்குப் பின் ,எச்சரிக்கையுடனும்
ஒவ்வொரு வார்த்தையாக உதிர்க்கிறேன்

ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை  பார்ப்பதுபோல்
பாவனை செய்கிறாய்

முறிந்து போன  காதலால் மௌனத்துடன்
வெளியேறுகிறேன் நான்

அதன் காரணத்தையாவது
நீ கூறியிருக்கலாம் .







No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...