மனதின் ஓசை
நிசப்தம் ,மௌனம்
தனிமை ,ஓசையற்ற இருள்
பாலைவனத்தின் ஒற்றை மனிதன்
ஆளில்லா தனித்தீவில் நான் மட்டும்
நீ சினங்கொண்டு சீறியிருந்தால்
உன் குணம் கண்டு
குறை தீர்த்திருப்பேன்
விவாதம் இல்லை
தீர்வும் இல்லை
எங்ஙனம் என் நிலை உரைப்பேன்
எங்கே என் நிலை உரைப்பின்
ஒற்றை அலட்சிய பார்வையால் வீழ்த்துவாயோ
என்ற அச்சத்தில் நானும் மௌனமாய்
நாட்கள் நகர்கிறது
எத்தனை நாட்கள் இப்படியே .......?
நீ என்னை விட்டு விலகுகிறாயா ? என்பது எனக்குத் தெரியாது -ஆனால்
நான் உன்னை விட்டு மெல்ல விலகுகிறேன் என்பது மட்டும் தெரியும் .
நிசப்தம் ,மௌனம்
தனிமை ,ஓசையற்ற இருள்
பாலைவனத்தின் ஒற்றை மனிதன்
ஆளில்லா தனித்தீவில் நான் மட்டும்
நீ சினங்கொண்டு சீறியிருந்தால்
உன் குணம் கண்டு
குறை தீர்த்திருப்பேன்
விவாதம் இல்லை
தீர்வும் இல்லை
எங்ஙனம் என் நிலை உரைப்பேன்
எங்கே என் நிலை உரைப்பின்
ஒற்றை அலட்சிய பார்வையால் வீழ்த்துவாயோ
என்ற அச்சத்தில் நானும் மௌனமாய்
நாட்கள் நகர்கிறது
எத்தனை நாட்கள் இப்படியே .......?
நீ என்னை விட்டு விலகுகிறாயா ? என்பது எனக்குத் தெரியாது -ஆனால்
நான் உன்னை விட்டு மெல்ல விலகுகிறேன் என்பது மட்டும் தெரியும் .
No comments:
Post a Comment