Sunday, March 27, 2016

                          விட்டுக்கொடுத்தல் 

எனக்குப் பிடித்த பொம்மையை
தம்பி விரும்பியதற்காக விட்டுகொடுத்திருக்கிறேன்

பாகம் பிரிக்கையில் நான்   படித்தவன் எனக்கூறி
அத்தனையும் சகோதரனுக்கு எழுதுகையில் விட்டுக்கொடுத்திருக்கிறேன்

பதவி உயர்வு வரும்போது சக அலுவலருக்கு கொடுத்துவிட்டு
ஓரமாய் கைதட்டிய வேளையில் விட்டுகொடுத்திருக்கிறேன்

பெண்வீட்டாரின் பொய்களை நம்பி
பலவற்றை விட்டுக்கொடுத்துருக்கிறேன்

அப்பாவின் மருத்துவ செலவில் அத்தனைபேரும்
அமைதிகாக்கையில் கடன்பட்டு காப்பாற்றியநாளில் விட்டுக்கொடுத்திருகிறேன்

ஆனாலும் ..

நான் விரும்பிய பொம்மை கிடைக்காத நாளில்
இரகசியமாய் அழுதிருக்கிறேன்

வேலையில்லாமல் தெருத் தெருத்தெருவாய் அலைந்தநாளில்
அண்ணனின் கேலியில் உள்ளே குமைந்த்திருக்கிறேன்

பதவி உயர்வு பெற்றவன் அடிக்கடி என்னை ஏவி
வேலையிடும் போது அவன் உள்மனம் கண்டு புழுங்கியிருக்கிறேன்

ஏமாற்றிய பெண் வீட்டார் இன்னும் நல்ல மாப்பிள்ளை பார்த்திருக்கலாம்
என்று சொல்லும் வேளையில் உள்ளே நொறுங்கியிருக்கிறேன்

சகோதரர்கள் திட்டமிட்டு வீழ்த்திய வலையில்
நான் கடனாளியானதால் கலங்கியிருக்கிறேன்

விட்டுக்கொடுத்தல் என்பது
ஏமாளித்தனம்  என உறைக்கையில் -உறைகிறேன் .

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...