Monday, March 21, 2016

                       நிலா 
முழு நிலா அன்று
 என்னையே பார்ப்பதாய் ரசிக்கிறேன்

மேகங்கள் மறைத்துக்கொள்ளும்
வேளையில்
ஏமாற்றமடைகிறேன்

சில நேரங்களில்
மேகத்திலிருந்து பாதி
 தெரிகையில் மிகுந்த அழகாய்
உணர்கிறேன்

தினம் தினம் நிலவை ரசிப்பது
பழக்கமாக மாறிவிட்டது

நிலா வருவதும் போவதுமாய்
இருக்கையில்
உணர்ச்சியின் கலவையாய்
மாறுகிறேன்

ஒரு அமாவாசையில் வராது நிலா என தெரிந்தும்
வானத்தையே வெறித்து பார்த்துக்கொண்டேஇருக்கிறேன்

நிலாவின் பெயர் மட்டும்
மூளைக்குள் புகுந்து
இறங்க மறுத்து இம்சிக்கிறது

என் காலம் மட்டும் கறைகிறது .

No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...