Monday, February 29, 2016

                                                          அலை

எனக்கு குளிர்தாங்கவில்லை
உனக்கு கம்பளி போர்த்துகிறேன்

நீ சினங்கொண்டால்
உன் இருதயம் தாங்காதே
அமைதியுருகிறேன்

உனக்கு பிடிக்குமென்பதால்
என்னை தாழ்த்திக்கொள்கிறேன்

எங்கேயும் உன்னோடிருந்தால்
மகிழ்வாய் என்பதால்
உன்னுடனேயே இருக்கிறேன்

ஒரு துறவிக்கு எதற்கு மகுடம்
என உனக்குச் சூடி அழகு பார்க்கிறேன்

எல்லா காலங்களிலும் உன்
கண்களில் கவலையை காண்கையில் நான்
கவலையில் ஆழ்கிறேன்

நீயும் நானும் கடற்கரையில்
கால் நனைக்கச் சென்றோம்
உன் கரம் பற்றி  நிற்கிறேன்

இறுக்கிப் பிடிக்கிறீர்கள் என கரம் உதறி
சுதந்திரமாய் வாழவிடுங்கள்
என்ற ஒரு சொல்லோடு
கரையை நோக்கி வேகமாய் நடக்கிறாய்

எங்கோ தவறிழைத்து விட்டோமா
என கலங்கி நிற்கிறேன்

ஓயாத சத்தத்துடன்
மனதிற்குள் அடிக்கிறது அலை .



No comments:

Post a Comment

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...