Wednesday, January 14, 2015

                    உழவர் திருநாள் 

விளைவிக்கிறவன் விவசாயி
விலை வைக்கிறவன் வியாபாரி 
படிச்சவன் வேலை நிறுத்தம் செஞ்சி
சம்பளத்தை கூட்டுறான் 
உழைச்சவன் வேலை செஞ்சி
கஞ்சியைதான் குடிக்கிறான்  
அம்பத்தெட்டு வயதுக்கப்புறம் 
ஓய்வாய் இருக்க ஊதியம் 
ஐந்தாண்டு காலத்துக்குள்ள
ஏழு தலைமுறைக்கு சொத்து  
ஜெயிச்சா சில கோடி
தோற்றா பல கோடி 
கம்பெனி லாபம், பங்கு சந்த வீட்சி 
கணக்கு காட்டி காசு சுருட்டும் கூட்டம் 
இது எதுவும் தெரியாத உழைப்பாளி
உலகத்துக்கு சோறு போடும் விவசாயி 
பருவம் தப்பி மழை பொழிஞ்சாலும்
காவிரி வர மறுத்தாலும் 
இதை எதையும்  கண்டுக்காத சாமிக்கு  
சக்கரைப் பொங்கல் படைக்கும்  
பொன்னான நாள்தான்
பொங்கல் திருநாள். 


1 comment:

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...