உழவர் திருநாள்
படிச்சவன் வேலை நிறுத்தம் செஞ்சி
சம்பளத்தை கூட்டுறான்
சம்பளத்தை கூட்டுறான்
உழைச்சவன் வேலை செஞ்சி
கஞ்சியைதான் குடிக்கிறான்
கஞ்சியைதான் குடிக்கிறான்
அம்பத்தெட்டு வயதுக்கப்புறம்
ஓய்வாய் இருக்க ஊதியம்
ஐந்தாண்டு காலத்துக்குள்ள
ஏழு தலைமுறைக்கு சொத்து
ஏழு தலைமுறைக்கு சொத்து
ஜெயிச்சா சில கோடி
தோற்றா பல கோடி
தோற்றா பல கோடி
கம்பெனி லாபம், பங்கு சந்த வீட்சி
கணக்கு காட்டி காசு சுருட்டும் கூட்டம்
இது எதுவும் தெரியாத உழைப்பாளி
உலகத்துக்கு சோறு போடும் விவசாயி
உலகத்துக்கு சோறு போடும் விவசாயி
பருவம் தப்பி மழை பொழிஞ்சாலும்
காவிரி வர மறுத்தாலும்
காவிரி வர மறுத்தாலும்
இதை எதையும் கண்டுக்காத சாமிக்கு
சக்கரைப் பொங்கல் படைக்கும்
சக்கரைப் பொங்கல் படைக்கும்
பொன்னான நாள்தான்
பொங்கல் திருநாள்.
பொங்கல் திருநாள்.
kavignare super kavithai, super concept. vaazhthukkal.
ReplyDelete