Saturday, December 13, 2014

                       கேள்விகள் 

என் 

வண்ணக் கனவுகளில்
கருப்பு மை பூசியது யாரோ

நேற்று வரை இருந்த உறவை
நின்று போக செய்தது யாரோ

நினைத்து மகிழவேண்டியவை மறந்து தொலைவதும்
மறக்கவேண்டியவை மனதை அறுப்பதும் ஏனோ

நான் வகுத்த பாதை வேறு
பயணிக்கும் பாதை வேறானது எப்படி

ஊருக்கெல்லாம் தெரிஞ்ச சேதி
அவளுக்கு மட்டும் தெரியாம போனது எப்படி
நான் நேசிச்ச மண்ணு
என்னை ஏன் நிராகரிக்கணும்

எதுவும் இல்லாத போது வந்த தூக்கம்
எல்லாம் இருக்கும் போது
ஏன் வர மறுக்கணும்

இப்படி
விடையில்லா கேள்விகள்
எனக்குள் மட்டுமா
எல்லோருக்குள்ளும் உண்டா ?

        

1 comment:

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...