Friday, January 3, 2014

                தேடல்                        



எண்ணக் கலவை 
என்னைத் தின்றது 
எழுத்தில் பகிர்கிறேன் 
என் நிலை உணர்க

உறவுகள் தேடி அலைந்தேன் 
ஒட்டிக்கொள்ளும் அட்டை என்றது 
உறவுகள் உதறி தள்ள 
ஒதுங்கி நின்றேன் 
பாசமில்லா பதர் என்றது 

வசதியில் கொஞ்சம் நாள்
வாழ்ந்து பார்த்தேன் 
பட்டினி கிடந்தவனுக்கு 
பல்லக்கு தேவையா  என்றது

உண்மையாய் இருந்தேன் 
உரசிப்பார்த்து போலி என்றது 
போலியாய் வாழ்ந்தேன் 
உரசாமல் அசல் என்றது 

பிறருக்கு உதவினேன் 
விளம்பர யுக்தி 
விளகிக்கொள்  என்றது 

கருமியாய் நானும்
காலம் கழித்தேன் 
விளம்பரம் வெளுத்தது என்றது 

அனுபவம் பெற்று 
அறிந்ததைச் சொன்னேன் 
பொய் உரைக்கிறான்
போதும் என்றது

தேடலில் இருந்து பெறுவது 
தெளிதல் என்றேன் 
குழம்பிப் போனவன் 
குழப்புகிறான் என்றது

மனிதனிடமிருந்து  விலகிக்கொண்டேன் 
இயற்கையோடு நேசம் கொண்டேன் 
வாழ்க்கை இனிது 
வாழும் ஆசை கொண்டேன்.  









   

2 comments:

  1. உன்னத படைப்பு பாராட்டுக்கள் நண்பா..........

    ReplyDelete
  2. பெரியார் சொல்கிறார்:
    எவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன்


    ஞாபகப்படித்தியமைக்கு நன்றி - சக்தி

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...