Friday, January 17, 2014

                           மனிதாபிமானம் 

என்
இதயம் உடைத்து 
இன்பம் கண்டவன் 

என் 
ஆயுள் ரேகை அழிக்க 
ஆசை கொண்டவன்

 என் 
பகலை இருட்டாக்கி
விழிகளை பறித்துக்கொண்டவன் 

என்னை 
கர்ணன் என வர்ணனை செய்து 
கைப்பொருளை களவாடியவன் 

என்னை எனக்குள் 
சிறை வைத்தவன் 

துரோகம் இழைத்து என் 
தூக்கம்  கலைத்தவன்  

எனினும் 
என்னுள் இன்னமும் 
மிச்சமிருக்கிறது
மனிதாபிமானம் .  



1 comment:

  1. மீதமிருப்பு : மனிதாபிமானமா? இல்ல மனசாபிமானமா??

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...