வாலி ஒரு கவி அவதாரம்
அக்காலக் கவிஞர்கள்
இக்காலக் கவிஞர்கள் என
எக்காலக் கவிஞர்களோடும் உங்கள்
இனிய பாடலால் உலவுவதால்
முக்காலமும் பேசும் கவிஞரானீர்
பூக்களின் அழகில் ஏது வேறுபாடு
கவிஞர்களுக்குள் எதற்கு ஒப்பீடு
கம்பரும் ஒன்றுதான்,வாலியும் ஒன்றுதான்
சினிமாவில் மட்டுமே நடித்து
நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியாத மனிதர்
சேர்க்கும் பொருளனைத்தையும்
செலவழித்தே தீர்ப்பதில்
நீங்களும் கண்ணதாசனும் மட்டுமே
போட்டியாளர்கள்
பொருள் சேர்க்காவிட்டாலும்
பத்மஸ்ரீயும் கலைமாமணியும்
புகழ் சேர்த்தன உங்கள் வாழ்வில்
பதினைந்தாயிரத்திற்கு மேல்
பாடல்கள் படைத்த நீங்களும்
கவிஅவதாரமே
அவதார புருஷன் எழுதி
நாத்திகரையும் ஆத்திகராய்
மாற்றி வைத்த பெருமையெல்லாம்
உங்களைச் சேரும்
"வேஷம் கலைக்கவும்
ஓய்வு எடுக்கவும்
வேளை வந்ததம்மா "
இது உங்கள் வார்த்தை
ஓய்வில் இருக்கிறீர்கள்
மறு ஜென்மத்திலும்
கவிஞனாய் மலருங்கள்.
"மறு ஜென்மத்திலும்
ReplyDeleteகவிஞனாய் மலருங்கள்"- நல்லா எழுதியிருக்கீங்க சார் . அருமை இருக்கு .