Friday, July 26, 2013

     எப்படி சொல்வேன் 


இரகசியமாய் உன் ஞாபகங்களை சேமிக்கிறேன் 
இரவினில் கொஞ்சம் அழுகிறேன் 

சபைகளில் தன்நிலை  மறக்கிறேன் 
சங்கீதம் கூட கேட்பதை தவிர்க்கிறேன் 

காதுக்குள் உன் குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது 
கண்களை மூடி உன் முகம் பார்க்கமுடிகிறது 

என் சுவாசத்தில் ஏதோ தடுமாற்றம் 
இதயம் இடப்புறமா ,வலப்புறமா குழப்பம் 

கடந்த கால நினைவுகள்   நிகழ்கால நிகழ்வுகளை  அழித்துப் போகிறது 
காதலை வெளிப்படுத்தாத நான் ஊமையானால் என்ன 

காற்றலையை உதவிக்கு அழைக்கிறேன்  அது 
செல்லுமிடமெல்லாம் சொல்லிவிட்டு சென்றால் என்னாவது 

காத்திருந்தே கரைகின்றன
எனது பொழுதுகள் .

1 comment:

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...