Friday, September 14, 2012

      
       ஒரு மகனின் ஏக்கம்



தாயே எனக்கு நீ
தாய்ப்பால் கொடுத்ததில்லை
தாலாட்டு பாடியதில்லை
உன் மடியில் உறங்கியதில்லை
என் பிஞ்சு விரல் உன் சேலை பற்றியதில்லை
தலை கோதிவிட்டதில்லை
தமிழ் சொல்லி தந்ததில்லை
அறு  சுவை உணவை ஊட்டியதில்லை
அம்மா என்று அழுததோடு சரி
அம்மா என்று அழைத்ததில்லை
எப்படி முடியும்
என்னைப்  புறந்தள்ள
இறந்தவள் அல்லவா நீ  

1 comment:

  1. இனிய கவிஞரே,

    அரசுத் தொட்டில் குழந்தையின் நிலையும் இதுதான்.

    குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகளின் நிலையும் இதுதான்.

    ஆண்டவன் படைப்பில் ஏன் இத்தனை வேறுபாடுகளோ?

    மனக்கலக்கத்துடன்

    செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி - 14.

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...