Monday, August 27, 2012

  அம்மா



அம்மா   நான்
அழகா
அலங்கோலமா
குருடா,செவிடா
அறியாமல்
கருப்பையில்
தாங்கிக்கொண்டாய்

நான்
பிறந்தபோது
பிரபஞ்சம்
பார்க்கவில்லை
என் சுவாசம் உணரவில்லை
உன்  வாசம் மட்டுமே உணர்ந்தேன்

என் அழுகையில் தெரிந்துகொண்டாய்
பசியா! தாகமா!

என்
மழலைப்பேச்சை
மொழிபெயர்க்க தெரிந்தவள்
நீ மட்டுமே

பூவை
உலகம் ரசிக்கும்
இந்த தளிரை
ரசித்தவள் நீ

உன்னை
உருக்கி என்
உருவம் செய்தாய்
உன் அருமை
உணரச்செய்தாய் .

1 comment:

  1. இனிய கவிஞரே,
    தாய்மையின் சிறப்பை புதிய பரிணாமத்தில் செதுக்கியள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்

    நன்றி

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...