காதலியைக் கரம் பிடித்தேன்
இந்த பாலைவனம்
பூத்தது உன் நினைவால்
இந்த
துறவி
துறந்தது துறவு
அணிந்தது உன்
அன்பு
என்
விழித்திரையில்
எப்போதும் நீ
விழித்திருக்கிறாய்
ஒரு விமர்சகனை
நினைத்து அல்லல் படும்
எழுத்தாளன் போல்
உன்னால் கலங்கிப்போகிறேன்
காதலிக்கும் போது
திருமணம் வேண்டிநின்றோம்
திருமணத்திற்குப்பின்
காதலை யாசித்தோம்
திருமணத்திற்கு முன்னும் பின்னும்
அதிகம் கோபித்துகொன்டவள் நீ தான்
நாம் வசதியில் வாழ்ந்தவர்கள் அல்ல
வறுமையிலிருந்து மீண்டவர்கள்
என்னோடு சண்டையிட்டால்
மகிழ்வேன்
உன்னோடு சண்டையிட்டு கொள்கிறாய்
எனக்காக
அதிகம் இழந்தவள் நீ
உனக்காக
எல்லாம் இழந்தவன் நான் .
இனிய கவிஞரே,
ReplyDeleteநீவிர் உமது சொந்த வாழ்க்கையை இந்த கவிதையில் அற்புதமாக செதுக்கி உள்ளீர்கள் என்பது உங்களின் ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்குமா?
சிற்சில எழுத்து பிழைகள் இருப்பது கணினியில் உள்ளீடு செய்வதில் உள்ள சிரமத்தினால்தான் என்பது என்போல் உள்ள உமது ரசிகர்களுக்கு தெரியாமல் இல்லை. மிகவும் அற்புதமான உமது பணி தொடரட்டும். வாழ்க வளமுடன்.
அன்புடன்
க.செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி-14.
Welldone keep it up
ReplyDelete