ஒண்ணா படிச்சோம்
ஒரு தெருவில் குடிஇருந்தோம்
நீ கண்விழிச்சால்
என் வீடு
நான் கண்விழிச்சால்
உன் வீடு
சண்டையும்
சமாதானமும்
நித்தம் வரும்
நட்பை வளர்க்கும்
உன் வீட்டு
தென்னைமரம்
எனக்காக காய்குதுன்னு
என் வீடு வந்து சேரும்
நான்
பட்டணத்தில்
படிப்பை நம்பினேன்
நீ
கிராமத்தில்
உழைப்ப நம்பினாய்
என்
கல்லூரி காலத்தில்
மாதம் தவறி
மழை பெய்தாலும்
வாரம் தவறாது
உன் கடிதம்
வெள்ளாமையில்
வந்த காசில்
வித விதமா
துணி வாங்கி கொடுத்து
கல்லூரியில் என் வறுமையை
மறைச்ச
வேலைக்கு போனதும்
உன்னை
உயரவச்சு பார்க்க
ஆசைப்பட்டேன்
நான்
கல்யாணம் செஞ்சேன்
வேலை இல்ல
வேலை வந்தப்ப
உனக்குன்னு எதுவும்
செய்யல
பங்காளி சண்டை வந்து
பாகம் பிரிக்கையில்
நீ கட்டிய குடிசை
உனக்கில்லைன்னு ஆச்சு
சுவரை இடிக்க
நீ போட்ட கணக்கு
தப்பாச்சு
எமன் போட்ட கணக்கு
சரியாச்சு
சுவர் இடிந்து விழுந்தது
உன் மீது
மண்ணை நேசிச்ச உன்னை
மண்ணுதான் விழுங்கிடிச்சி
நல்லதுசெய்ய
நாள் கடத்திய
பாவி நான் .
excellent
ReplyDeletevery good. It is the very very casual one. Yetharthamanathu.
ReplyDelete