Wednesday, January 18, 2012

கவிஞன்


                             கவிஞன் 




நிஜங்களில் 
நனையாமல்
நிழலில்
கரைகிறான்.

தொலைந்துபோன
தோழியை
தேடுவதாய்
சொற்களுக்கிடையே
சிக்கிக்கொள்ளும்
வரியைத் தேடுகிறான் .

ஒரு
கருவைத் தாங்குவதைபோல்
சுகமானசுமைகளை
சுமக்கிறான்.

பொம்மையை
கட்டிக்கொண்டு
உறங்கும்
ஒரு மழலையைபோல்
தன் கவிதையின்
நினைவோடு
உறங்குகிறான் .

சுகமோ
துக்கமோ
நிகழ்காலத்தில்
எதிர்காலத்திற்காக
பதிவு செய்கிறான் .

வாழும்போது
பேசப்படாத
தன் கவிதை
வாழ்க்கைக்கு
பிறகாவது
பேசப்படுமா
என்ற
ஏக்கத்துடன்
எழுதுகிறான்
கவிஞன் .

1 comment:

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...