Saturday, November 26, 2011

பூமியை வாழவிடு

                                   பூமியை வாழவிடு 





மண்ணும் மரமும்
மழையும் மகத்தானவை
மனிதன் நன்றி
மறந்தவன்.

மனிதன்
மண்ணைச் சுரண்டினான்
மலையைச் சிதைத்தான்
கோபப்படாத பூமிக்கு
கொடுமையைத் தந்தவன்

பூக்களும் காய்களும்
கனிகளும் தந்த
பூமிக்கு
வெறும் காயங்களைத்
தந்தவன் மனிதன்

மண்ணில் பல வகை உண்டு
மனிதனில் பல வகை உண்டு
மண் நல்லவை

மனிதன் நன்றி மறந்தவன்
மண்ணுக்கு வாசனை உண்டு
மனிதனுக்கும் வாசனை உண்டு
மண்வாசனை மட்டும்
நுகரதக்கவை

நீ
வாழவேண்டுமா முதலில்
பூமியை
வாழவிடு

1 comment:

  1. dear Mullai,

    indha kaalathirku thevaiyana
    thathuvangalai
    alli veesiulleeeeergal.

    very smart and cute
    regards,

    Senthilkumar

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...