Tuesday, November 15, 2011

தனிமை


தனிமை 


அந்த ஒற்றையடிப்பாதையில்
எத்தனையோ வளைவுகள்
அத்தனையும் காயங்கள்

நத்தை தன் கூடு சுமப்பது போல்
சுமக்க வேண்டி வருமோ என அஞ்சி
வழித்துணையை நாடியதில்லை நான்

எத்தனையோ வருடங்களை
கடந்த பின்னும்
என்னுள் சிறு துளியாய்
தங்கியுள்ளது என் தனிமை

மேகங்களின் நிழல்கள் என
சில நேரங்களில்
சோகங்களில்
கரைந்து போயிருக்கிறேன்

வெயில் நாட்களில்
மழை வேண்டியும்
மழை நாட்களில் வெயில்
வேண்டியும்
நான் நின்றதில்லை
கடவுள் கொடுத்ததை
மகிழ்ச்சியோ துன்பமோ
அப்படியே
அள்ளிக்கொண்டிருகிறேன்

எத்தனையோ
சுகங்களுக்குபின்னும்
என்னுள்
ஒளிந்துகொண்டிருக்கிறது
சோகமயமான
அந்த ஒற்றையடிப்பாதை .

2 comments:

  1. நண்பரே வணக்கம்.
    நானும் தனிமையை அனுபவித்துள்ளேன்.
    உங்கள் கவிதை மூலம் அதன் வலியும் வலிமையும் புரிகிறது.
    அது சில சமயங்களில் சுகமானதாகவும் பிற சமயங்களில் சோகமானதகவும் உள்ளது.
    அதை புரிந்து கொண்ட எனக்கு உங்களின் கவிதை ஒரு வடிகால்.
    நன்றிகள் பல.
    நட்புடன்
    --
    Ezhilnagar Senthilkumar

    ReplyDelete
  2. Loneliness is inevitable in life. But how we take it is really important. It is really appreciable that you have got the temperament that whatever comes in life you accept it without murmuring.
    george

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...