Monday, June 27, 2011



முதல் காதல் 







உன் பெயர்
தமிழ் என்பதால்
உன்னை நேசித்தேனா?
அல்லது
உன் பெயர்
தமிழ் என்பதால்
தமிழை நேசித்தானா?

மீசை முளைக்கும்
முன்னே காதல்
முளைத்தது

நீ வசிக்கும் தெருவை
நான் நடந்த தூரம்
அளந்து பார்த்தால்
சஹாரா பாலைவனம்
சற்று அதிர்ந்து போகும்

கல்லூரியின்
ஒரு விடுமுறை நாளில்
நான், நீ
உன் அழகுக்கு பொருந்தாத கணவன்
சந்தித்துக் கொண்டோம்
நீ பேசவில்லை
தலைகவிழ்ந்து கொண்டாய்

கடமை முடிந்ததாய்
கர்வப்படும் உன் அப்பாவிடம்
சொல்
சராசரி இந்திய அப்பாக்களில்
அவரும் ஒருவர் என்பதை...

Tuesday, June 7, 2011

யாசகன் மனம் அறிக


                    யாசகன் மனம் அறிக




பசியாத நல்வயிறு
உலகிலில்லை
பசித்த பாழ் வயிறு
உலகில் உண்டு

ஒரு கோடி பணம்
ஆகாரமில்லாத தீவு
ஒரு கவளம் சோறு
உன் வயிறோ
பசித்த வயிறு
எது வேண்டும் உனக்கு
உணவா? பணமா?

அஃறினையாய் இருந்தவரை
உணவுக்கு பஞ்சமில்லை
உயர்திணை யானோம்
உணவுக்கு வழி இல்லை.

நடைபாதை மனிதர்க்கு
முகம் சுளிக்கும் மனிதர்களே
பூமி புரட்டிப் போட்டால்
நீயும் நானும் ஒரே ஜாதி
நினைவில் கொள்க.

நின்னைச் சில வினாக்கள் கேட்பேன்



நின்னைச் சில வினாக்கள் கேட்பேன்

















நின்னைச் சில வினாக்கள் கேட்பேன்
என்னை எதற்கு நீ படைத்தாய்?
ஏன் இன்னும் உயிரோட்டம் கொடுத்தாய்?
மெத்த படிக்க வைத்தாய்
மேதாவியாய் உலவ விட்டாய்
நித்தம் உனை நினைக்க
நீங்காத துன்பம் எனக்களித்தாய்
நீர்க்குமிழிபோல் வாழ்வென்றாய்
எப்பொழுது உடையும் என்பதிலேயே
என் சிந்தையை வைத்தாய்
எனக்கும் உனக்கும் இடையில்
யார் யாரையே வைத்தாய்
அவாகள் உனக்கும் எனக்கும்
எதிரியா? நண்பனா? என
சொல்லாமல் விட்டாய்
வளமான வாழ்வெனக்காட்டி
இருட்டிலேயே தேடவைத்தாய்
உயிருக்கும் உணவுக்குமே போராட்டமாய்
உத்தமன் நீ உயிர் வாழ்வாய் என
ஒரு சொல்லோடு
எனை தனியனாய் விட்டாய்
காதல் எனக்களித்தாய் - அதுவரை
உறவறுத்து காட்டில் தவம் செய் என்றாய்
தவத்தில் நாட்டமில்லை, காதலில் இன்பமில்லை
என்னதான் நினைத்தாய் என்னை!
என்னை எப்படியாகியும் செய்துவிட்டு போ!
நித்தம் உத்தமனாய் வாழ்ந்திட வை இறைவா.

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...