Tuesday, April 5, 2011

நட்பு

நட்பு 



நட்பு
வளர்பிறை மட்டுமே உள்ள
வானம்

உறவுகள் கசப்பாய்
நட்போ இனிப்பாய்

நெல்லிக்கனியை
நட்பிடம் மட்டுமே
கொடுத்தானே அதியமான்.

அங்கவை,சங்கவையை
தங்க வைத்து
தாலிபாக்கியம்
யார் வாங்கிகொடுத்தார்
கபிலர் தானே

தானம் கொடுத்தவன்
தானம் பெற்ற வரலாறு
கர்ணன் துரியோதன்
நட்பல்லவா

வறுமை
வாட்டிய போது
குசேலன்
எங்குச் சென்றான்
தாய் வீடா
மாமன் வீடா
கண்ணணைத் தானே
கண்டான்

“ஈயென இரத்தல்
இழிந்தது”
என்பதால்
மெளனமாய் வந்தான்
குசேலன்

அதிசயித்தான் – தன் வீடு
மாளிகை யானதைக்
கண்டு

மறுக்கவில்லை
உறவுப் புள்ளிகள்
சேர்ந்துதான் என் வட்டம்
ஆனால்
நட்பே நீ
மையப் புள்ளியல்லவா1

மகனின்
நலம் விசாரிப்பு
ஈமெயில் சிக்கனம்
அறுபது வயதிலும்
அருகே அமர்ந்து
ஆறுதல் சொல்வது
நட்பு மட்டுமே.

மெளனம்

மௌனம் 



மொழி அனிச்சை
மெளனம் பயிற்சி
முன்னதை விட
பின்னதே சிரமம்

மனம் ஒருபுறம் பேசும்
வாய் ஒரு புறம் பேசும்
பழுதுபட்ட வானொலியின்
அலை வரிசையைப் போல
குறைந்த பட்சம் ஒரு
வாசலாவது மூடப்படட்டுமே

சமாதான பேச்சு
தொடங்கும் போதுதான்
யுத்தத்திற்கான
விதை விதைக்கப்படுகிறது.

பேசி மகிழ்ந்த
காதலெல்லாம்
கசந்த கதை ஏராளம்
பேசாத காதலே
உன்னதம்

வார்த்தை ஜாலங்கள்
தந்திர மிக்க பேச்சு
அத்தனையும்
மெளனத்தின் முன்
தோற்றுப் போவதில்லையா!

தென்றலும் , புயலும்









உன் மீது

பூ விழும், பூவை
எடுத்துக்கொள்
கல் விழும்
கல்லை எடுத்துக்கொள்
கற்களெல்லாம் பூவாக
மாறும் எனக்கனவு காணாதே

நீச்சலில் எதிர்நீச்சலும்
சுகமே
வாழ்க்கையும்,அனுபவமும்
அப்படியே

யாரும் உன்னிடம்
நடித்தால் கலங்காதே
இறுதிக் காட்சி வரை
ரசித்து விட்டுப் போ

பலவருடத் தோழமை கூட
ஒருநாள்
உன்னைப் பற்றிய கேவலமான
சான்றிதழ் தரக்கூடும்
வாங்கி வைத்துக் கொள்

ஒருநாள் நல்லவிதமான
சான்றிதழ் தரக்கூடும்
அதையும் வாங்கிக் கொள்

இரண்டையும் ஒப்பிட்டுப்பார்
சத்தமாய்ச் சிரித்து விடு
ஏனெனில் இரண்டும் உண்மையில்லை

யாராலும் உனக்கு
மகிழ்ச்சியை அள்ளிக்கொடுக்க
முடியாது
ஏனெனில்
உனக்கே உன்னால் மகிழ்ச்சியை
தரமுடியாதபோது எப்படி
இன்னொருவரால் முடியும்.

இனிப்பு,கசப்பு,துவர்ப்பு,உவர்ப்பு
இதில் எதை நீக்கினால் சுவை
எல்லாமே சுவைதான்
வாழ்க்கையும் அப்படியே.

உன்னை யாரும் துன்புறுத்த முடியாது
நீ அனுமதிக்காத வரை

மகனே ஒரு நிமிடம்




அன்று
உன்
விரல் பிடித்து
நடக்க பழக்கினேனே
நானோ
இன்று
என்
தள்ளாமைக்கு
தோள் கொடுப்பாய்
என இருந்தேன்

வேறு வழியில்லை
வாக்கிங் ஸ்டிக்
வாங்கிக் கொண்டேன்

என் தோள்மேல் தூக்கி
உன்னை கடவுளை தரிசிக்க
சொன்னேன்
அதனால் தானோ என்னவோ
எனக்கு
அவன்
அருள் கிடைக்கவில்லை

உன்னோடு
பேசிக்கொண்டே இருந்தேன்
நீ பேச்சுப் பழக
இன்று தொணதொணப்பாகிக் போனேனே
உயிர் போகாமல்
இருக்கேனே

ஊரெல்லாம்
கடன்பட்டேன்
உன் உயர்வுக்காக
பெற்ற கடன்
தீர்ப்பாயா?

நீ
சபையில்
உன்
தோளில்
மாலை
என்
தோளில்
நுகத்தடி

மகிழ்ச்சிதான்
மகனே
உன் மனைவி
உன் மகன் ஊர்வலமாய்
நீங்கள்.

எனக்காக
ஒன்றே ஒன்று மட்டும்
செய்
என் பேரனை
நல்ல மகனாய்
வளர்த்து விடு
போதும் எனக்கு.

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...