Sunday, April 6, 2014

                      கடிதம் 
ஒவ்வொரு கடிதமும் 
ஒரு நாவலாகவோ அல்லது 
ஒரு கவிதையாகவோ 
உயிர் பெறும் 

மூளையை கசக்கிப் பிழிந்து 
உணர்வுகளை கொட்டித்தீர்ப்பது 
கடிதத்தில் 

தேர்வுக்கட்டணம் ,project work என 
தெரிந்தே எழுதப்படும் பொய் 
மகனின் கடிதம் 

புகுந்த வீட்டின் பெருமை பேசி 
பிறந்த வீட்டின் அருமையை 
மறைமுகமாக வெளிப்படுத்துவது 
மகளின் கடிதம் 

காதல் கடிதங்களும் ,தேர்வு முடிவுகளும் 
கட்டுக்களைப் பிரிக்கையிலேயே 
தபால் அலுவலகத்திலேயே 
மடக்கிப் பிடிக்கப்படும் 

புத்தகங்களுகிடையே 
புதைத்து வைக்கப்பட்டிருக்கும் 
காதல் கடிதங்கள்
எத்தனை முறை படித்தாலும் 
சலிக்காத கடிதங்கள் 
என்னையும் கொஞ்சம் படித்தால் என்ன என 
ஏங்கும் புத்தகங்கள் 

முதல் நாள் அனுப்பிய காதல் கடிதம்
மூன்றாம் நாள்  பதிலுக்காக 
காத்திருக்கும் காலங்கள் 

காதலி ,மனைவியானால்
கடிதங்கள் உயிர் பெறுமே
அந்த சுகம்
இந்த அலைபேசி உலகில் 
இன்றைய தலைமுறைக்கு கிட்டுமா  
என்பதே என் கவலை . 




1 comment:

  1. அன்புள்ள கவிஞரே,
    இது அவசர யுகம் என்று நமக்கு நாமே போட்டுக்கொண்ட பொய்வேலி.
    தமிழ் பாட கட்டுரைகள் வாயிலாக கடிதங்கள் எழுத மாணவர்களுக்கு நம் அரசாங்கமும் கற்றுக்கொடுக்கிறது. எது எப்படியாயினும் கடிதங்கள் எழுதுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம் மற்றும் முயற்சியின் மூலம் தான் சாத்தியமாகிறது. "என்னையும் கொஞ்சம் படித்தால் என்ன என ஏங்கும் புத்தகங்கள்" என்ற வரிகள் சிலிர்க்க வைக்கின்றன. கவிஞருக்கு கோடானுகோடி பாராட்டுக்கள்
    வாழ்க வளமுடன் .

    அன்புடன்
    செந்தில்குமார்.

    ReplyDelete

மனம்

 மனம் உண்டென்பதும் மனம் தான் இல்லை என்பதும் மனமே பார்க்காமல் விரும்பியதும் மனம் பழகிய பின்னும் வெறுத்ததும் அதே மனம் இருட்டில் இருந்துற வெளிச...